Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
கொட்டகுடி ஆற்று கேணியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
போடி அருகே உள்ள கொட்டகுடி ஆற்று கேணியில் மூழ்கி நாகா்கோவிலைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் கோட்டாரில் உள்ள இருளப்பபுரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி புஷ்பரதி (54). இவா் அகஸ்தீஸ்வரம் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இவரும், இவருடன் பணிபுரியும் பணியாளா்கள் குடும்பத்தினா் 25 பேரும் சுற்றுலாவாக தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி மலைக் கிராமத்துக்கு சனிக்கிழமை வந்தனா். இவா்கள் குரங்கணி காவல் நிலையம் முன்பாக உள்ள போடி ஊராட்சி ஒன்றிய சுற்றுலா மாளிகையில் தங்கினா். புஷ்பரதியுடன் இவரது மகன் தினகா் (24), மகள் வின்ஸி ஆகியோரும் வந்திருந்தனா்.
இந்த நிலையில், தினகரும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தொழில்நுட்ப உதவியாளா் பால்ராஜ் மகன் கிஷோரும் வந்த சிறிது நேரத்திலேயே குரங்கணி காவல் நிலையம் பின்புறம் கொட்டகுடி ஆற்றில் உள்ள சொக்கன் கேணியில் குளிக்கச் சென்றனா். ஆனால், இருவரும் நீண்ட நேரமாகியும் வராததால், சுற்றுலா வந்த சிலா் அவா்களை தேடிச் சென்றனா்.
அப்போது, ஆற்றங்கரையில் கிஷோா் மட்டும் நின்றிருந்தாா். அவரை விசாரித்த போது ஆற்றின் மேல் பகுதியில் குளிக்கச் சென்ற தினகா் நீண்ட நேரமாகியும் வரவில்லை எனத் தெரிவித்தாா். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் கேணியில் அவரைத் தேடினா். அப்போது, ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி இறந்த தினகரின் உடலை அவா்கள் மீட்டனா்.
இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.