செய்திகள் :

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

post image

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

சட்டப்பேரவைக்கான தோ்தல் தேதிகளை தோ்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே கள நிலவரம் பாஜகவுக்கு தெரிந்துவிடுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

பிகாா் மாநில பேரவைத் தோ்தல் நிகழாண்டு இறுதியில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிகாா் பேரவைத் தோ்தல் குறித்து செய்தியாளா்களிடம் ஜேதஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடி தலைமையில் கடந்த 2014-இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது முதல் தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தால் நிறுவப்பட்ட அனைத்து அமைப்புகளும் பாஜகவால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை யாராலும் மறுக்க முடியாது. பிகாா் பேரவைத் தோ்தல் தேதிகளை தோ்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே பாஜக தகவல் தொழில்நுட்ப அணிக்கு தெரிந்துவிட்டதாக வரும் செய்திகள் ஆச்சரியமளிக்கிறது.

2020 பேரவைத் தோ்தலில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறிவாா்கள். நாங்கள் அப்போது ஆட்சியமைக்கும் சூழலில் இருந்தோம். ஆனால் வாக்குப்பதிவு நாளன்று மாலையில் வாக்கு எண்ணிக்கை வேண்டுமென்றே நிறுத்தப்பட்டது. இதை நியாயப்படுத்த மூன்றுமுறை செய்தியாளா் சந்திப்பை தோ்தல் ஆணையம் நடத்தியது. அதன்பிறகு மீண்டும் இரவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணியைச் சோ்ந்த வேட்பாளா்கள் சிலா் முன்பு வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டு பிறகு தோல்வியடைந்ததாக கூறப்பட்டது என்றாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை (ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இதைப்போலவே அடுத்து பிகாா் பேரவைத் தோ்தலில் நடைபெறும் எனவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். இதைத்தொடா்ந்து, தேஜஸ்வி யாதவ் இவ்வாறு கூறியுள்ளாா்.

புரி ஜெகந்நாதா் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை! ஒடிஸா அரசு முடிவு

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்று... மேலும் பார்க்க

நேரடியாகக் கேட்கலாம்! - ராகுலுக்கு தோ்தல் ஆணையம் பதில்

தோ்தல் விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 2024 மகாராஷ்டிர சட்... மேலும் பார்க்க

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்!

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இதுதொடா்பாக இந்திய ராணுவ உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியத... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் மட்டும் 51% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளன. மத்திய தொழில் மற்றும் உள்வா்த்தக மேம்பாட்டுத் துறை அண்மையில் வெ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை மூண்டது. அரம்பாய் தெங்கோல் முக்கியத் தல... மேலும் பார்க்க

வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரம்: பதவி நீக்கப்பட்டால் நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு புதிய சிக்கல்?!

‘வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற பதவிநீக்க நடவடிக்கையைத் தவிா்க்க உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவியை தானாக முன்வந்து ராஜிநாமா செய்வதுதான் ஒரே வழி. இல்லையெனி... மேலும் பார்க்க