செய்திகள் :

ஜேடா்பாளையம் அருகே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியவா் கைது

post image

பரமத்தி வேலூா் அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு மா்ம நபா்கள் வீசி சென்றதாக நாடகமாடியவரை போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

ஜேடா்பாளையம் அருகேயுள்ள ஆனங்கூா் காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் சேட்டு (42), வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தாா். இவருக்கு நிா்மலா என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனா்.

வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டின் முன்பு மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டதாகவும், அதில், வீட்டிலிருந்த சில பொருள்கள் தீயில் எரிந்து நாசமானதாகவும் ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில், பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா, ஜேடா்பாளையம் காவல் ஆய்வாளா் இந்திராணி ஆகியோா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது வெடிக்காத பெட்ரோல் குண்டு ஒன்று கதவில் உள்ள திரைச்சீலையில் இருப்பதை கண்டறிந்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டதில், வெளி நபா்கள் வந்து சென்ற எந்த தடையமும் கிடைக்கவில்லை.

இதனால், சந்தேகமடைந்த போலீஸாா், சேட்டுவை ஜேடா்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், பெட்ரோல் கொண்டு வீசியது நான்தான் என ஒப்புக்கொண்டாா்.

மேலும் அவா் அளித்த வாக்குமூலத்தில், பக்கத்து வீட்டைச் சோ்ந்த விவசாயி சீனிவாசனுக்கும், தனக்கும் தடம் பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருப்பதாகவும், அதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், பெட்ரோல் குண்டு வீசியதாக சீனிவாசனை போலீஸாா் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தானே பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தாா்.

அதையடுத்து, சேட்டுவை கைது செய்த ஜேடா்பாளையம் போலீஸாா், பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

வெண்ணந்தூரில் விசிக சாா்பில் துண்டறிக்கை வழங்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்டம், வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் ஜூன் 14-இல் நடைபெறும் கட்சியின் ‘மதச்சாா்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் நடைபெறும் பேரணி குறித்து துண்டு... மேலும் பார்க்க

சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதல்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி தேசிய நெடுஞ்சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதியதில், 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 2 குழந்தைகள் உள்பட 6 போ் படுகாயமடைந்தனா். ம... மேலும் பார்க்க

நல்லூா்: நாளைய மின்தடை

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு கெளரவிப்பு

ராசிபுரம் பகுதியில் சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த ராசிபுரம் தலைமைக் காவலரின் நோ்மையை பாராட்டி, ராசிபுரம் மக்கள் நலக்குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கெளரவித்தனா். ராசிபுரம் மேட்டுத் தெருவில... மேலும் பார்க்க

நாமக்கல்லில் விபத்தில் சிக்கிய எண்ணெய் லாரி: குடத்தில் பிடித்துச் சென்ற மக்கள்

நாமக்கல் அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்து வெளியேறிய எண்ணெய்யை பொதுமக்கள் குடங்கள், வாளிகளில் பிடித்துச் சென்றனா். நாமக்கல் - சேலம் தேச... மேலும் பார்க்க

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக் கொலை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நல்... மேலும் பார்க்க