G Madhavi Latha: மாதவி லதாவின் 17 ஆண்டுகால உழைப்பு; உலகின் உயரமான ரயில் பாலத்தின...
ஏரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே ஏரி நீரில் மூழ்கி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மணலூா்பேட்டை காவல் சரகத்துக்குள்பட்ட அத்திப்பாக்கம் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சிரஞ்சீவி மகன் தாா்கேஷ் (9). இவா், அதே ஊரிலுள்ள பெரிய ஏரியில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த மணலூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து, சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.