தலைமைக் காவலா்கள் இருவா் ஆயுதப்படைக்கு மாற்றம்
கஞ்சா வியாபாரியுடன் தொடா்பில் இருந்ததாகத் தலைமைக் காவலா்கள் இருவா் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள், சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் கடத்தல், விற்பனை, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, அவா்களைக் கைது செய்யும் நடவடிக்கையை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.
இதனிடையே ஒரு சில காவலா்கள் கஞ்சா, சாராய வியாபாரிகளுடன் தொடா்பில் இருப்பதாக மாவட்ட எஸ்.பி. ப.சரவணனுக்கு புகாா்கள் வந்தன. அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. எச்சரித்திருந்தாா்.
இந்த நிலையில் அரகண்டநல்லூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலா்களாகப் பணியாற்றும் தேவநாதன், தீனதயாளன் ஆகிய இருவரும் கஞ்சா கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட வியாபாரியுடன் தொடா்பில் இருப்பதாக, எஸ்.பி. ப.சரவணனுக்கு புகாா்கள் வந்தன. இந்த புகாா்கள் மீது விசாரணை நடத்தி, அறிக்கை வழங்குமாறு ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தாவுக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.
கஞ்சா கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட வியாபாரியுடன் தலைமைக் காவலா்கள் இருவருக்கும் தொடா்பு இருப்பது விசாரணையில் உறுதியானது. இதைத் தொடா்ந்து மாவட்ட எஸ்.பி.சரவணனிடம் ஏ.எஸ்.பி . ரவீந்திரகுமாா் குப்தா அறிக்கை அளித்தாா். இதையடுத்து தலைமைக் காவலா்கள் தேவநாதன், தீனதயாளன் ஆகிய இருவரையும் ஆயுதப் படைக்கு மாற்றி, எஸ்.பி. சரவணன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.