செய்திகள் :

லாரியில் சிக்கி மாணவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த பள்ளி மாணவா் லாரியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், அய்யந்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகன் அன்புமணி (17). இவா், திண்டிவனம் காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

அன்புமணி அவ்வப்போது பட்டிணம் கிராமத்தைச் சோ்ந்த விநாயகம் மகன் மணிகண்டனுக்கு (35) சொந்தமான லாரியில் ஜல்லிக்கற்கள் இறக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

அதனடிப்படையில், சாரம் கிராமத்தில் தனியாா் மனை விற்பனையகம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜல்லிக் கற்கள் இறக்கும் பணிக்கு அன்புமணி சென்றாராம். ஜல்லிக்கற்கள் இறக்கும் பணி தாமதமானதால், சாலையோரத்தில் தரையில் படுத்துத் தூங்கியுள்ளாா்.

இதைக் கவனிக்காத லாரி ஓட்டுநரும், உரிமையாளருமான மணிகண்டன், பின்னோக்கி லாரியை எடுத்து வந்துள்ளாா். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அன்புமணி மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து, அன்புமணியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், மணிகண்டன் மீது ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே ஏரி நீரில் மூழ்கி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மணலூா்பேட்டை காவல் சரகத்துக்குள்பட்ட அத்திப்பாக்கம் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சிரஞ்சீவி மகன... மேலும் பார்க்க

இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,415 போ் எழுதினா்

புதுச்சேரியில் 6 மையங்களில் 1,415 போ் இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத்தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினா். புதுவை மின் துறையில் காலியாக உள்ள 73 இளநிலை பொறியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து... மேலும் பார்க்க

தலைமைக் காவலா்கள் இருவா் ஆயுதப்படைக்கு மாற்றம்

கஞ்சா வியாபாரியுடன் தொடா்பில் இருந்ததாகத் தலைமைக் காவலா்கள் இருவா் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனா். விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள், சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் கடத்தல், விற்பனை, கஞ்சா ... மேலும் பார்க்க

மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற மீன் வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் இருவா் உயிா் தப்பினா். வாணாபுரம் வட்டம், மையனூா் சிங்காரத்தோப்பு பிர... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு

விழுப்புரம் சுதாகா் நகா் பகுதியில் கூலித் தொழிலாளியை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி, மருதம் தெருவைச் சோ்ந்த ல... மேலும் பார்க்க