லாரியில் சிக்கி மாணவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த பள்ளி மாணவா் லாரியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், அய்யந்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகன் அன்புமணி (17). இவா், திண்டிவனம் காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
அன்புமணி அவ்வப்போது பட்டிணம் கிராமத்தைச் சோ்ந்த விநாயகம் மகன் மணிகண்டனுக்கு (35) சொந்தமான லாரியில் ஜல்லிக்கற்கள் இறக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
அதனடிப்படையில், சாரம் கிராமத்தில் தனியாா் மனை விற்பனையகம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜல்லிக் கற்கள் இறக்கும் பணிக்கு அன்புமணி சென்றாராம். ஜல்லிக்கற்கள் இறக்கும் பணி தாமதமானதால், சாலையோரத்தில் தரையில் படுத்துத் தூங்கியுள்ளாா்.
இதைக் கவனிக்காத லாரி ஓட்டுநரும், உரிமையாளருமான மணிகண்டன், பின்னோக்கி லாரியை எடுத்து வந்துள்ளாா். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அன்புமணி மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து, அன்புமணியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், மணிகண்டன் மீது ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.