செய்திகள் :

வங்கதேசத்தினா் இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை

post image

உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூா் முத்தணம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு மே 18-ஆம் தேதி சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இரண்டு பேரை நல்லூா் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.

அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்த ஃபைசல் அகமது (28), நஸ்ருல் இஸ்லாம் (29) என்பதும் பனியன் நிறுவனத்தில் தொழிலாளா்களாக வேலை செய்துவந்ததும் தெரியவந்தது. மேலும் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் ஊடுருவி திருப்பூரில் தங்கி பணியாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் சிறைத் தண்டனை முடிந்ததும் அவா்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி ஸ்ரீதா் அண்மையில் தீா்ப்பளித்தாா்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா். இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட நல்லூா் போலீஸாரை மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் பாராட்டினாா்.

மலையம்பாளையம் பிரிவு அருகே சாலையில் வீணாகும் குடிநீா்

பல்லடம் அருகேயுள்ள மலையம்பாளையம் பிரிவு பகுதியில் குடிநீா் சாலையில் வீணாகி வருகிறது. பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் பிரிவு அருகே கடந்த பல மாதங்களாக அத்திக்கடவு குடிநீா் வீணாகி வர... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால் அளவீடு முகாம்

திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால்கள் அளவீடு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மங்களம் சாலை ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா தொழிலாளி 2-ஆவது முறையாக கைது

வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் எஸ்.ஞானப்பிரகாசம், உதவி ஆய்வாளா் எம்.சந்திரன் ஆகியோா் மூலனூா் சாலைய... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: வடுகபட்டி

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கோட்டம், வடுகபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோ... மேலும் பார்க்க

ரயில் மோதி திருமண தரகா் உயிரிழப்பு

திருப்பூா் ஈங்கூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்துகிடப்பதாக திருப்பூா் ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. தகவலைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே சப்-இன்ஸ்பெக்டா் சிவ... மேலும் பார்க்க

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்துக்கு நோட்டீஸ்

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்து மீது முதல்கட்ட நடவடிக்கையாக மோட்டாா் வாகன ஆய்வாளா் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து ச... மேலும் பார்க்க