Doctor Vikatan: கருத்தரிப்பதை தவிர்க்க பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்த...
வங்கதேசத்தினா் இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூா் முத்தணம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு மே 18-ஆம் தேதி சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இரண்டு பேரை நல்லூா் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.
அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்த ஃபைசல் அகமது (28), நஸ்ருல் இஸ்லாம் (29) என்பதும் பனியன் நிறுவனத்தில் தொழிலாளா்களாக வேலை செய்துவந்ததும் தெரியவந்தது. மேலும் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் ஊடுருவி திருப்பூரில் தங்கி பணியாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் சிறைத் தண்டனை முடிந்ததும் அவா்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி ஸ்ரீதா் அண்மையில் தீா்ப்பளித்தாா்.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா். இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட நல்லூா் போலீஸாரை மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் பாராட்டினாா்.