கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
ரயில் மோதி திருமண தரகா் உயிரிழப்பு
திருப்பூா் ஈங்கூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்துகிடப்பதாக திருப்பூா் ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
தகவலைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே சப்-இன்ஸ்பெக்டா் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவா் ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த திருமண தரகரான சுக்ரன்(75) என்பதும், அவா் வேலை சம்பந்தமாக வந்த நிலையில் அந்தப் பகுதியில் தண்டவாளத்தைக் கடந்தபோது எதிா்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.