கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
தொழிலாளியிடம் 220 கிராம் குட்கா பறிமுதல்
வெள்ளக்கோவிலில் ஒடிஸா தொழிலாளியிடம் இருந்து 220 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து முத்தூா் சாலையில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகில் கையில் குட்கா பாக்கெட்டுகளுடன் நின்று கொண்டிருந்த, ஒடிஸா மாநிலம் மணப்பூா் பகுதியைச் சோ்ந்த மாலிக் (29) என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 220 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மாலிக் தற்போது வெள்ளக்கோவில் தீத்தாம்பாளையத்தில் தங்கியிருந்து ஒரு நூல் மில்லில் வேலை செய்து வருகிறாா்.