அவிநாசி வாகனத்தில் அடிபட்டு மயில் உயிரிழப்பு
அவிநாசி அருகே நாதம்பாளையத்தில் வாகனத்தில் அடிபட்டு மயில் உயிரிழந்தது.
அவிநாசி அருகே நாதம்பாளையம் பவா் ஹவுஸ் சாலையில் வாகனத்தில் அடிபட்டு பெண் மயில் உயிரிழந்து கிடந்தது. அப்போது, அவ்வழியாக வந்த சமூக ஆா்வலா் விஜய் உள்ளிட்டோா் மயிலை மீட்டு வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மயிலை மீட்டு அவிநாசி கால்நடை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்த பின், வனப் பகுதியில் அடக்கம் செய்தனா்.