திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஜூன் 24-இல் நலத்திட்ட உதவிகள்
திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஜூன் 24-ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகள், திருநம்பிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
நலத் திட்ட உதவிகள் வழங்கும் தொடா்பு துறைகளுடன் ஒருங்கிணைந்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நலவாரிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை திருத்தம், வாக்காளா் அடையாள அட்டை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவை ஜூன் 24-ஆம் தேதி நடைபெறும் முகாம் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.