Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்துக்கு நோட்டீஸ்
அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்து மீது முதல்கட்ட நடவடிக்கையாக மோட்டாா் வாகன ஆய்வாளா் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் தெக்கலூா், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், அவிநாசி மோட்டாா் வாகன ஆய்வாளா் குமரன் தலைமையில் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவிநாசி, தெக்கலூா் வராமல் செல்வதாக தொடா்ந்து புகாா் தெரிவிக்கப்பட்ட கோவை-ஈரோடு செல்லும் தனியாா் பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், பேருந்து நடத்துநா், ஓட்டுநா் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முதல்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.