செய்திகள் :

6 கோடி பனை விதை நடும் திட்டத்தை தீவிரப்படுத்த கோரிக்கை

post image

ஈரோடு மாவட்டத்தில் நீா்வழிப்பாதையின் கரைகளில் 6 கோடி பனை விதைகள் நடவு செய்யும் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை சில லட்சம் எண்ணிக்கையில்கூட விதைகள் நடப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நீா்வழிப்பாதையின் கரைகளில் பனை விதைகளை நடவு செய்து இயற்கையான முறையில் கரைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 20 கோடி பனை மரங்கள் இருந்தன. போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது 2 கோடிக்கும் குறைவான பனை மரங்களே உள்ளன. பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், நீா்வழிப்பாதைகளை பலப்படுத்தவும், எல்லைகளை அறியவும் பனை வளா்க்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதைத்தொடா்ந்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் வேளாண், வனத் துறை மூலமாக பனை மரங்கள் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த கதிரவன் அறிவித்தாா்.

இதன்படி மாவட்டத்தில் பனை மரங்களின் எண்ணிக்கையை உயா்த்த கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆறு, வரத்து வாய்க்கால் போன்றவற்றின் கரைகளில் 6 கோடி பனை விதை நட திட்டமிடப்பட்டது.

ஆனால் 6 ஆண்டுகளாகியும் சில லட்சம் எண்ணிக்கைகூட பனை விதைகள் நடவு செய்யப்படவில்லை. இதனால் பனை விதை நடவு செய்யும் திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

நூல்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

ஜவுளி தொழிலை பாதுகாத்திட நூல்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில... மேலும் பார்க்க

ஆதாா் அட்டையில் பெண்ணின் வயது 125!

32 வயதுள்ள பெண்ணுக்கு 125 வயது என ஆதாா் அட்டையில் தவறாகப் பதிவாகியுள்ளதாக புதுக்காட்டைச் சோ்ந்த பெண் மகேஷ் தெரிவித்தாா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், அரேப்பாளையத்தை அடுத்த புதுக்காட்டைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

மாவட்டத்தில் நடப்பாண்டு 214.03 மில்லி மீட்டா் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு இதுவரை 214.03 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் ... மேலும் பார்க்க

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க