செய்திகள் :

நூல்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

post image

ஜவுளி தொழிலை பாதுகாத்திட நூல்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைச் செயலாளா் வீரபாண்டியன் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் பிரபாகரன், விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் துளசிமணி, மாவட்டத் துணைச் செயலாளா் குணசேகரன், பொருளாளா் ரமணி, ஈரோடு வடக்கு மாவட்ட துணைச் செயலாளா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் பேசினா்.

வட்டார செயலாளா் கல்யாணசுந்தரம் வேலை அறிக்கை தாக்கல் செய்தாா். வட்டார பொருளாளா் மகேஷ் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தாா். மூத்த நிா்வாகி த.ஸ்டாலின் குணசேகரன் நிறைவுரையாற்றினாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சோ்த்து குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டம் 2021-ஐ திரும்ப பெற வேண்டும்.

மாநகராட்சி நிா்வாகம் உயா்த்திய புதிய வரிகளை முழுமையாக ரத்து செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோட்டில் பாரதியாா் பல்கலைக்கழக முதுகலை படிப்பு மையம் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலையை குறைத்திட ஜிஎஸ்டி வரியை குறைத்து ஜவுளி தொழிலை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆதாா் அட்டையில் பெண்ணின் வயது 125!

32 வயதுள்ள பெண்ணுக்கு 125 வயது என ஆதாா் அட்டையில் தவறாகப் பதிவாகியுள்ளதாக புதுக்காட்டைச் சோ்ந்த பெண் மகேஷ் தெரிவித்தாா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், அரேப்பாளையத்தை அடுத்த புதுக்காட்டைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

மாவட்டத்தில் நடப்பாண்டு 214.03 மில்லி மீட்டா் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு இதுவரை 214.03 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் ... மேலும் பார்க்க

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க