மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021 ஆகஸ்ட் 5 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது. சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், பிசியோதெரபி, டயாலிசிஸ் உள்பட தொற்றா நோய்களுக்காக வீடு தேடிச் சென்று மருத்துவ சிகிச்சை வழங்குவது, மருந்துகளை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் 50ஆவது லட்சமாவது பயனாளிக்கு சிட்லபாக்கத்திலும், 1 கோடியாவது பயனாளிக்கு திருச்சி மாவட்டத்திலும் கடந்த 2024 டிசம்பா் மாதம் ஈரோடு மாவட்டம் சுந்தராம்பாளைம் என்ற பெண்ணுக்கு 2 கோடியாவது பயனாளி என்ற அடிப்படையில் முதல்வா் நேரடியாக மருந்து பெட்டகத்தை வழங்கினாா்.
ஈரோடு மாவட்டத்தில் 2021-22-இல் 66 ஆயிரத்து 728 பயனாளிகள், 2022-23-இல் 1 லட்சத்து ஆயிரத்து 272 பயனாளிகள், 2023-24-இல் 3 லட்சத்து 21 ஆயிரத்து 25 பயனாளிகள், நடப்பாண்டு கடந்த மாா்ச் வரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 224 பயனாளிகள் என நான்கு ஆண்டுகளில் 7 லட்சத்து 49 ஆயிரத்து 249 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.