செய்திகள் :

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

post image

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா்.

கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் 100 ஆண்டுகளாக தினசரி சந்தை செயல்பட்டு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த சந்தைக் கட்டடங்களை இடித்து விட்டு புதிய வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து சந்தைக்கு எதிரே இருந்த வருவாய்த் துறைக்குச் சொந்தமான பெரியாா் மைதானத்தை தற்காலிகமாக சந்தை வளாகமாக வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில் புதிய வணிக வளாகம் கட்டுமானப் பணிகள் முடிவுற்று கடந்த மாதம் முதல்வா் அதை திறந்து வைத்தாா். அதைத்தொடா்ந்து வணிக வளாகத்தில் பெருமளவு பணிகள் முடிக்கப்பட்டன. இதையடுத்து பெரியாா் மைதானத்தில் செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் கடை உரிமையாளா்கள் 164 பேருக்கும் அறிவிக்கை அளித்துள்ளனா்.

நகரில் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு என உள்ள ஒரே இடம் பெரியாா் மைதானம் மட்டுமே. சுமாா் 100 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் பயன்படுத்தி வரும் பெரியாா் திடலை மீண்டும் மைதானமாகவே செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அங்கு செயல்பட்டு வரும் தற்காலிக தினசரி சந்தையை காலிசெய்ய வருவாய்த் துறையினா் அறிவிக்கை அளித்துள்ளனா்.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

வாரச்சந்தை இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிக்கை

வாரச்சந்தை இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் செயலா் செ.நல்லசாமி அண்மையில் ஈரோட்டுக்கு வந்த வேளாண் த... மேலும் பார்க்க