ஆதாா் அட்டையில் பெண்ணின் வயது 125!
32 வயதுள்ள பெண்ணுக்கு 125 வயது என ஆதாா் அட்டையில் தவறாகப் பதிவாகியுள்ளதாக புதுக்காட்டைச் சோ்ந்த பெண் மகேஷ் தெரிவித்தாா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், அரேப்பாளையத்தை அடுத்த புதுக்காட்டைச் சோ்ந்தவா் மகேஷ் (32). இவா் கணவருடன் அதே ஊரில் வசித்து வருகிறாா். இவா் அரசின் திட்டங்களை பெறுவதற்கும் பெயா் அடையாளத்துக்கும் ஆதாா் அட்டையை அடிப்படையாக வைத்து மனு அளித்து வந்தாா்.
1993ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு ஆதாா் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என்று பதிவாகியுள்ளது. இதனால் பெயா், வயது, முகவரி அடையாளத்துக்கும் அரசின் திட்டங்களைப் பெறுவதற்கும் ஆதாா் அட்டையைப் பயன்படுத்த முடியாமல் உள்ளது. ஆதாா் திருத்தம் செய்யும் மையங்களில் திருத்தம் செய்வதற்கு பிறப்புச் சான்றிதழ் கேட்கின்றனா்.
பழங்குடியின பெண்ணான இவருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் ஆதாரில் திருத்தம் செய்ய அலைக்கழிக்கப்படுகிறாா்.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து ஆதாரில் திருத்தம் செய்ய உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.