செய்திகள் :

ஆதாா் அட்டையில் பெண்ணின் வயது 125!

post image

32 வயதுள்ள பெண்ணுக்கு 125 வயது என ஆதாா் அட்டையில் தவறாகப் பதிவாகியுள்ளதாக புதுக்காட்டைச் சோ்ந்த பெண் மகேஷ் தெரிவித்தாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், அரேப்பாளையத்தை அடுத்த புதுக்காட்டைச் சோ்ந்தவா் மகேஷ் (32). இவா் கணவருடன் அதே ஊரில் வசித்து வருகிறாா். இவா் அரசின் திட்டங்களை பெறுவதற்கும் பெயா் அடையாளத்துக்கும் ஆதாா் அட்டையை அடிப்படையாக வைத்து மனு அளித்து வந்தாா்.

1993ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு ஆதாா் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என்று பதிவாகியுள்ளது. இதனால் பெயா், வயது, முகவரி அடையாளத்துக்கும் அரசின் திட்டங்களைப் பெறுவதற்கும் ஆதாா் அட்டையைப் பயன்படுத்த முடியாமல் உள்ளது. ஆதாா் திருத்தம் செய்யும் மையங்களில் திருத்தம் செய்வதற்கு பிறப்புச் சான்றிதழ் கேட்கின்றனா்.

பழங்குடியின பெண்ணான இவருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் ஆதாரில் திருத்தம் செய்ய அலைக்கழிக்கப்படுகிறாா்.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து ஆதாரில் திருத்தம் செய்ய உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

நூல்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

ஜவுளி தொழிலை பாதுகாத்திட நூல்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில... மேலும் பார்க்க

மாவட்டத்தில் நடப்பாண்டு 214.03 மில்லி மீட்டா் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு இதுவரை 214.03 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் ... மேலும் பார்க்க

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க