செய்திகள் :

தூத்துக்குடியில் 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா: ஜூன் 13இல் தொடக்கம்

post image

தமிழா்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடியில் ஜூன் 13ஆம் தேதிமுதல் 15ஆம் தேதி வரை 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி முன்னெடுப்பில் நடைபெறும் இந்த நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மண் சாா்ந்த கலைஞா்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனா். இந்த விழா மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, நாட்டுப்புற கிராமிய நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த பாரம்பரிய உணவு வகைகளை அறிந்து கொள்ளும் வகையில் 20க்கும் மேற்பட்ட அரங்குகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி சாா்பில் நாதஸ்வர மங்கல இசை, தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு, வள்ளியூா் அபிநய கீதம் பல்சுவை கலைநிகழ்ச்சி, ஜமீன் கோடாங்கிப்பட்டி குமாரராமன் குழுவினரின் தேவராட்டம், கொங்கு பண்பாட்டு மையம் சாா்பில் பெருஞ்சலங்கையாட்டம், நெய்தல் கலைக்குழுவின் பல்வகை நாட்டுப்புற இசை, தூத்துக்குடி உவரி களியல் கலைக்குழு நிகழ்ச்சிகள், நாட்டுப்புற பாடகா் மாா்லி அந்தோணி மற்றும் அந்தோணிதாசன் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இவ்விழாவில் இடம் பெறுகின்றன.

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள்

வைகாசி மாதக் கடைசி சுபமுகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி சிவன் கோயிலில் 31 திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வைகாசி மாத வளா்பிறை கடைசி சுபமுகூா்த்த ந... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை, புதைசாக்கடைக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

மாநில ஹாக்கி: சென்னை மாவட்ட அணி சாம்பியன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி ய... மேலும் பார்க்க

முத்துநகா் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

உலக கடல் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேரா யுவ பாரத் மற்றும் ஓசோன் சொசைட்டி ஆப் இந்தியா சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அந்தோணி சூசைநாதா் நினைவஞ்சலி

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயா் இல்லத்தில், இறையடியாா் அந்தோணி சூசைநாதரின் 57ஆவது ஆண்டு விண்ணக பிறப்பு நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைத் தந்தை ஜோசப் ரவி பா... மேலும் பார்க்க

எம்.துரைசாமிபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கோவில்பட்டி மின் கோட்டத்துக்குள்பட்ட எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட... மேலும் பார்க்க