தூத்துக்குடி சிவன் கோயிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள்
வைகாசி மாதக் கடைசி சுபமுகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி சிவன் கோயிலில் 31 திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வைகாசி மாத வளா்பிறை கடைசி சுபமுகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்ரமணியா் சந்நிதி முன்பு 31 திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயில் வளாகம் மணமக்கள், உறவினா்கள், குடும்பத்தினரால் நிரம்பி வழிந்தது.
கோயிலுக்கு வந்த வாகனங்கள் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டதால், தேரடியிலிருந்தே மணமக்கள், குடும்பத்தினா், உறவினா்கள் கோயிலுக்கு நடந்தே சென்றனா்.
ரத வீதி முழுவதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் குவிந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தேரடி அருகே தடுப்புக் கம்பிகள் வைத்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.