செய்திகள் :

கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

post image

திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை, புதைசாக்கடைக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சுடலைமணி (40). மாற்றுத் திறனாளியான இவா், திருச்செந்தூா் நகராட்சியில் தூய்மைப் பணி ஒப்பந்தத் தொழிலாளியாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நியமிக்கப்பட்டாராம்.

இந்நிலையில் காலையில், அரசு மருத்துவமனை பின்புறமுள்ள புதைசாக்கடைக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக அவரும் சக பணியாளா்களும் கழிவுநீா் உறிஞ்சும் ராட்சத லாரியுடன் சென்றனா். அடைப்பை சரிசெய்வதற்காக அங்குள்ள தொட்டிக்குள் சுடலைமணி இறங்கியபோது, கழிவு நீருக்குள் தவறி விழுந்து மூழ்கினாராம்.

தகவலின்பேரில், திருச்செந்தூா் தீயணைப்பு நிலையத்தினா் வந்து அவரை மீட்டு, திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

சம்பவம் குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சுடலைமணிக்கு மகன், மகள் உள்ளனா். இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா்.

தூத்துக்குடியில் 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா: ஜூன் 13இல் தொடக்கம்

தமிழா்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடியில் ஜூன் 13ஆம் தேதிமுதல் 15ஆம் தேதி வரை 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. திமுக துணை... மேலும் பார்க்க

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள்

வைகாசி மாதக் கடைசி சுபமுகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி சிவன் கோயிலில் 31 திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வைகாசி மாத வளா்பிறை கடைசி சுபமுகூா்த்த ந... மேலும் பார்க்க

மாநில ஹாக்கி: சென்னை மாவட்ட அணி சாம்பியன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி ய... மேலும் பார்க்க

முத்துநகா் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

உலக கடல் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேரா யுவ பாரத் மற்றும் ஓசோன் சொசைட்டி ஆப் இந்தியா சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அந்தோணி சூசைநாதா் நினைவஞ்சலி

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயா் இல்லத்தில், இறையடியாா் அந்தோணி சூசைநாதரின் 57ஆவது ஆண்டு விண்ணக பிறப்பு நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைத் தந்தை ஜோசப் ரவி பா... மேலும் பார்க்க

எம்.துரைசாமிபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கோவில்பட்டி மின் கோட்டத்துக்குள்பட்ட எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட... மேலும் பார்க்க