கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு
திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை, புதைசாக்கடைக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சுடலைமணி (40). மாற்றுத் திறனாளியான இவா், திருச்செந்தூா் நகராட்சியில் தூய்மைப் பணி ஒப்பந்தத் தொழிலாளியாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நியமிக்கப்பட்டாராம்.
இந்நிலையில் காலையில், அரசு மருத்துவமனை பின்புறமுள்ள புதைசாக்கடைக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக அவரும் சக பணியாளா்களும் கழிவுநீா் உறிஞ்சும் ராட்சத லாரியுடன் சென்றனா். அடைப்பை சரிசெய்வதற்காக அங்குள்ள தொட்டிக்குள் சுடலைமணி இறங்கியபோது, கழிவு நீருக்குள் தவறி விழுந்து மூழ்கினாராம்.
தகவலின்பேரில், திருச்செந்தூா் தீயணைப்பு நிலையத்தினா் வந்து அவரை மீட்டு, திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
சம்பவம் குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சுடலைமணிக்கு மகன், மகள் உள்ளனா். இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா்.