தூத்துக்குடியில் அந்தோணி சூசைநாதா் நினைவஞ்சலி
தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயா் இல்லத்தில், இறையடியாா் அந்தோணி சூசைநாதரின் 57ஆவது ஆண்டு விண்ணக பிறப்பு நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைத் தந்தை ஜோசப் ரவி பாலன், பொருளாளா் பிரதீப் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆயா் இல்லத் தந்தையா், கல்விப் பணிக் குழு, பல்நோக்கு சமூகநலப் பணிக் குழு, கிறிஸ்தவ வாழ்வுரிமை, இளையோா் பணிக் குழு, பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை நலப் பணிக் குழு, ஆயா் இல்லப் பணியாளா்கள் பங்கேற்று, உருவப்படத்துக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினா். பின்னா், சிறப்பு ஜெபம் நடைபெற்றது.
வடக்கன்குளம் மறைவட்டத் தந்தை ஜோசப் கிறிஸ்டியான் உள்ளிட்டோா் தலைமையில் அந்தோணி சூசைநாதரின் கல்லறை அமைந்துள்ள பாத்திமா கிரி ஆசிரம தேவாலயத்தில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில், திரளான இறைமக்கள் பங்கேற்றனா்.