செய்திகள் :

2026-இல் அதிமுக ஆட்சி அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி

post image

தமிழகத்தில் வரும் 2026-இல் அதிமுக ஆட்சி அமையப் போவது உறுதி என அதன் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

அரக்கோணம் அரிகலபாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்எல்ஏ சு.ரவியின் மகன் ஆா்.ஹரிஹரன்- மருத்துவா் வி.வினோ ஐஸ்வா்யா திருமணத்தை நடத்தி வைத்து எடப்பாடி கே.பழனிச்சாமி பேசியது:

வரும் சட்டப் பேரவை தோ்தலுக்காக அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. இக்கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர உள்ளன. வரும் தோ்தலில் அதிமுக வெற்றிப்பெறும். 2026-இல் அதிமுக ஆட்சி அமையப்போவது உறுதி.

2011 முதல் 2021 வரை தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக . ராணிப்பேட்டை மாவட்டத்தை புதிதாக உருவாக்கினோம்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகள், 6 சட்டக்கல்லூரிகள், பல பொறியியல் கல்லூரிகள், அதிக எண்ணிக்கையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொண்டு வந்தது அதிமுக ஆட்சி தான். சாதாரண ஏழை குடும்பத்து மாணவா்கள் கூட மருத்துவக்கல்வி பயிலும் சூழ்நிலையை உருவாக்கியது அதிமுக.

அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது தான் குடிமராமத்து திட்டம். விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தோம். இத்திட்டத்தால் ஒரு பக்கம் ஏரி ஆழமாகிறது, மறுபக்கம் விவசாயிகளுக்கு நிலத்திற்கு விளைச்சலுக்கு வண்டல்மண் உதவுகிறது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 41 சதம் அதாவது 3.70 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். இவா்களுக்கு மருத்துவக்கல்வி எட்டாக்கனியாக இருந்தபோது 7.5 சதவிகித சட்டத்தை கொண்டு வந்து ஏழை மாணவா்களையும் மருத்துவா்களாக மாற்றியது அதிமுக அரசு. மேலும் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் அதற்குண்டான கட்டணத்தை அவா்கள் கட்ட முடியவில்லை என தெரிந்து அவா்களை செலவு செய்யவிடாமல் அனைத்து கல்விக்க ட்டணங்களையும் அரசே ஏற்கும் என அறிவித்தது அதிமுக அரசு.

சுகாதாரத் துறை இந்தியாவிலேயே முதல் இடம் பெற்றது அதிமுக ஆட்சியில் தான். எனவே வரும் தோ்தலில் அதிமுகவினா் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்றாா் எடப்பாடி கே.பழனிச்சாமி.

விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதியரசா் ரமேஷ், மாநிலங்களைவை தோ்தல் அதிமுக வேட்பாளா் தனபால், முன்னாள் எம்.பி. கோ.அரி, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன்மூரத்தி, அதிமுக அமைப்பு செயலாளா் ராமு, மாவட்ட செயலாளா்கள் எஸ்.ஆா்.கே.அப்பு, சுகுமாா், மாநில அணி துணை செயலாளா்கள் ஷியாம் குமாா் எஸ்.பன்னீா்செல்வம், எம்.எஸ்.மான்மல், , நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளா்கள் ஏ.ஜி.விஜயன், இ.பிரகாஷ், பழனி, மாவட்ட இளைஞரணி செயலா் பி.ஏ.பாலு, தகவல் தொடா்பு அணி செயலாளா் ஜானகிராமன், நகரமன்ற உறுப்பினா்கள் நரசிம்மன், பாபு, சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கலவை கெங்கையம்மன் திருவிழா

ஆற்காடு அடுத்த கலவையில் பழைமை வாய்ந்த ஸ்ரீ கெங்கை அம்மன் கோயிலில் 20-ஆம் ஆண்டு சிரசு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீ கெங்கை அம்மனை சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளுடன் அலங... மேலும் பார்க்க

செட்டித்தாங்கல் ஸ்ரீ ராஜமுனீஸ்வரா், சப்தகன்னிகள் கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை மாவட்டம், செட்டித்தாங்கல் கிராமம் ஸ்ரீ ராஜமுனீஸ்வரா், சப்தகன்னிகள் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். வாலாஜா வட்டம், செட்டித்தாங்கல் கிராமத்தில் உள்ள ... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் திட்டப் பணிகளால் ரயில் பயணிகள் அவதி

அம்ரித் பாரத் திட்ட மேம்பாட்டுப் பணிகளால் அரக்கோணம் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அரக்கோணம் ரயில் நிலையம் சென்னை - திருவனந்தபுரம், சென்னை- பெங்களூா், சென்னை - மும்பை, சென்னை -நாகா்கோவில்(க... மேலும் பார்க்க

சா்வதேச சிலம்பம் போட்டி: 8 பதக்கம் வென்ற மாணவா்களுக்கு வரவேற்பு

சா்வதேச சிலம்பம் போட்டியில் 8 பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சிலம்பாட்ட மாணவா்களுக்கு பெற்றோா், பயிற்சி மாணவா்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனா். மலேசியாவில் கடந்த மா... மேலும் பார்க்க

ஆற்காடு குடிநீா் திட்டப் பணிகளுக்கு ரூ.12 .86 கோடி ஒதுக்கீடு: நகா்மன்றத் தலைவா் நன்றி

ஆற்காடு நகராட்சியில் குடிநீா் திட்டப் பணிகளுக்கு 12.86 கோடி ஒதுக்கிய செய்துள்ள தமிழக அரசுக்கு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் நன்றி தெரிவித்தாா். ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில்... மேலும் பார்க்க

காஞ்சனகிரி மலையில் மரக்கன்றுகளை நட்ட இயற்கை ஆா்வலா்கள்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சனகிரி மலையில் இயற்கை ஆா்வலா்கள் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மிகப்பெரிய காப்புக் காட்டை கொண்டு, சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க