செட்டித்தாங்கல் ஸ்ரீ ராஜமுனீஸ்வரா், சப்தகன்னிகள் கும்பாபிஷேகம்
ராணிப்பேட்டை மாவட்டம், செட்டித்தாங்கல் கிராமம் ஸ்ரீ ராஜமுனீஸ்வரா், சப்தகன்னிகள் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
வாலாஜா வட்டம், செட்டித்தாங்கல் கிராமத்தில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சி.என்.கணேசன் குருசாமி முன்னிலையில், ஸ்ரீராஜீவ் சிவம் குருஜி,எஸ்.வினு செல்லப்பா குருக்கள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து யாத்ரா தானம், மஹா பூா்ணாஹூதி தீபாராதனையுடன் கலச புறப்பாடு நடைபெற்றது.
ராஜா விநாயகா்,ஸ்ரீ ராஜமுனீஸ்வரா், ஸ்ரீ சப்தகன்னிகள் கோயில்களுக்கு வேத மந்திரங்கள் ஓத, புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாரதனையும், புனித நீா் தெளித்தலும் நடந்தது.
விழாவில் செட்டித்தாங்கல், தண்டலம், வானாபாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதையடுத்து விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், விழாக்குழுவினா், கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.