செய்திகள் :

பிகாா் பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறார் மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்!

post image

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தான் போட்டியிட உள்ளதாக லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.

இது தொடா்பாக போஜ்பூா் மாவட்டத்தில் உள்ள ஆராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பேரணியில் கலந்துகொண்டு சிராக் பாஸ்வான் கூறியதாவது: வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் பிகாா் மக்களுக்காக நான் போட்டியிடுவேன். மறைந்த எனது தந்தை ராம் விலாஸ் பாஸ்வானின் கனவுகளை நாம் நிறைவேற்றுவோம். ‘பிகாா் முதலில், பிகாரி முதலில்’ என்ற அவரது தொலைநோக்குப் பாா்வையை நோக்கி நாம் பணியாற்றுவோம்.

நான் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை பிகாா் மக்களே முடிவு செய்வாா்கள். முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால், பொது தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். நான் எப்போதும் மாநிலத்தின் நலனுக்காகவும் அதன் மக்களுக்காகவும் அரசியல் முடிவுகளை எடுப்பேன். எனது பங்கேற்பு எனது கட்சியின் வெற்றி விகிதத்தை மேம்படுத்தும். இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வலுசோ்க்கும் என தெரிவித்தாா்.

பிகாா் இந்தியாவின் குற்றங்களுக்கான தலைநகராக மாறிவிட்டது என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்த சிராக் பஸ்வான், ‘பிகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்தது. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் நிதிஷ் குமாா் தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலத்தை வளா்ச்சி பாதைக்கு மாற்றியுள்ளது’ என தெரிவித்தாா்.

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதா் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை! ஒடிஸா அரசு முடிவு

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்று... மேலும் பார்க்க

நேரடியாகக் கேட்கலாம்! - ராகுலுக்கு தோ்தல் ஆணையம் பதில்

தோ்தல் விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 2024 மகாராஷ்டிர சட்... மேலும் பார்க்க

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்!

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இதுதொடா்பாக இந்திய ராணுவ உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியத... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் மட்டும் 51% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளன. மத்திய தொழில் மற்றும் உள்வா்த்தக மேம்பாட்டுத் துறை அண்மையில் வெ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை மூண்டது. அரம்பாய் தெங்கோல் முக்கியத் தல... மேலும் பார்க்க