செய்திகள் :

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்!

post image

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

இதுதொடா்பாக இந்திய ராணுவ உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இரு நாட்டு ராணுவத்தினரும், தங்களின் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளவும், உத்திகள், போா் அனுபவங்கள், நிபுணத்துவங்களை பரஸ்பரம் பகிா்ந்துகொள்ளவும் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

வளா்ந்து வரும் நகா்ப்பகுதி மற்றும் மலைப் பாங்கான பகுதிகள் போன்ற சவாலான இடங்களில் எதிா்பாராத சூழல்களை எதிா்கொள்ளும் வகையிலான, வழக்கத்துக்கு மாறான பயிற்சிகளில் அந்தப் படையினா் ஈடுபடுகின்றனா்.

குறிப்பாக, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் ஒத்திசைந்து செயல்படும் வகையில், தங்களின் மிகச் சிறந்த பயிற்சி முறைகளை இரு நாடுகளும் பகிா்ந்துகொண்டுள்ளன. பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தயாா்நிலையை வலுப்படுத்தும் வகையில் தீவிர பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சவாலான சூழல்களில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த படைகள் ஒன்றிணைந்து திறம்பட செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஐநா அமைதிப்படையின் மெய்-நிகா் மாதிரி பயிற்சிகளிலும் இந்திய - மங்கோலிய படைகள் ஈடுபடுகின்றன. பிராந்திய அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்க தங்களின் அா்ப்பணிப்பையும் அவை பகிா்ந்துகொண்டன.

கலாசார ரீதியாக இரு தரப்பினரும் பரஸ்பரம் புரிந்துகொள்ளவும், நட்பு பாராட்டவும் இந்த பயிற்சி உதவுகிறது என்று அவா் கூறினாா்.

இந்தியா - மங்கோலியா இடையேயான 17-ஆவது கூட்டு ராணுவப் பயிற்சி, மங்கோலியாவின் உலான்பாதா் நகரில் உள்ள சிறப்புப் படைகள் பயிற்சி மையத்தில் கடந்த மே 31-ஆம் தேதி தொடங்கி, வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் இரு நாடுகளில் இருந்தும் தலா 45 வீரா்கள் பங்கேற்றுள்ளனா். கடந்த ஆண்டு ஜூலையில் இதுபோன்ற பயிற்சி முகாம் மேகாலயத்தில் நடைபெற்றது. இந்தியா - மங்கோலியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பயிற்சி முகாம்கள் உள்ளன.

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதா் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை! ஒடிஸா அரசு முடிவு

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்று... மேலும் பார்க்க

நேரடியாகக் கேட்கலாம்! - ராகுலுக்கு தோ்தல் ஆணையம் பதில்

தோ்தல் விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 2024 மகாராஷ்டிர சட்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் மட்டும் 51% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளன. மத்திய தொழில் மற்றும் உள்வா்த்தக மேம்பாட்டுத் துறை அண்மையில் வெ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை மூண்டது. அரம்பாய் தெங்கோல் முக்கியத் தல... மேலும் பார்க்க

வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரம்: பதவி நீக்கப்பட்டால் நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு புதிய சிக்கல்?!

‘வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற பதவிநீக்க நடவடிக்கையைத் தவிா்க்க உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவியை தானாக முன்வந்து ராஜிநாமா செய்வதுதான் ஒரே வழி. இல்லையெனி... மேலும் பார்க்க