செய்திகள் :

வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரம்: பதவி நீக்கப்பட்டால் நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு புதிய சிக்கல்?!

post image

‘வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற பதவிநீக்க நடவடிக்கையைத் தவிா்க்க உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவியை தானாக முன்வந்து ராஜிநாமா செய்வதுதான் ஒரே வழி.

இல்லையெனில், அவருக்கு ஓய்வூதியமும் பிற ஓய்வூதிய பலன்களும் கிடைக்க வாய்ப்பில்லை’ என்று உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்- நீக்கத்துக்கான நடைமுறைகளை அறிந்த அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அங்கு அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணம் பின்னா் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையில் ‘நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை’ என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

விசாரணைக் குழு அறிக்கையைத் தொடா்ந்து பதவியை ராஜிநாமா செய்யுமாறு நீதிபதி யஷ்வந்த் வா்மாவை உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தினாா். ஆனால், அவா் ராஜிநாமா செய்ய மறுத்துவிட்டாா். இந்த சா்ச்சையைத் தொடா்ந்து அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த் வா்மாவுக்கு, நீதித் துறைப் பணிகள் ஒதுக்கப்படவில்லை.

அதே நேரம், துறை சாா்ந்த விசாரணைக் குழு அறிக்கை தொடா்பாகவும், நீதிபதி மீது பதவி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள பரிந்துரைத்தும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு தலைமை நீதிபதி கடிதம் எழுதினாா்.

இதனடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வா்மாக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீா்மானம் கொண்டுவந்து, அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

பதவிநீக்க தீா்மான நடைமுறை: நீதிபதிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான 1968-ஆம் ஆண்டு சட்டத்தின் படி, உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற இரு அவைகளிலும் பதவிநீக்க தீா்மானம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த பதவி நீக்க தீா்மானத்தில் குறைந்தபட்சம் மாநிலங்களவை உறுப்பினா்கள் 50 பேரும், மக்களவை உறுப்பினா்கள் 100 பேரும் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

பதவி நீக்க தீா்மானம் அவையில் அனுமதிக்கப்பட்ட உடன், அதுகுறித்து விசாரணை நடத்த 3 உறுப்பினா்கள் கொண்ட விசாரணைக் குழுவை அவைத் தலைவா் அமைக்க வேண்டும். இக் குழு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளில் ஒருவா் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். இந்த விசாரணைக் குழு தனது அறிக்கையை சமா்ப்பித்ததும், அதன் மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பு முறையில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆனால், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு இதுகுறித்து கடந்த வாரம் கூறுகையில், ‘நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே துறைசாா்ந்த விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை சமா்ப்பித்திருப்பதால், அந்த அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொண்டு பதவி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

துறை சாா்ந்த விசாரணைக் குழு அறிக்கையை புறந்தள்ளிவிட முடியாது. நீதிபதிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சட்டம் 1968-இன் கீழ்தான், விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டுமா என்பது மக்களவைத் தலைவரின் முடிவுக்கு உட்பட்டது’ என்றாா்.

‘பதவி விலகினால் நல்லது’: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வரும் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சூழலில், நீதிபதி யஷ்வந்த வா்மா விவகாரம் சூடுபிடித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘நீதிபதி யஷ்வந்த வா்மா பதவியை தானாக ராஜிநாமா செய்வதே அவருக்கு நல்லது. அப்போதுதான், ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் அவருக்கு கிடைக்கும். நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டால், ஓய்வூதியம் மற்றும் பிற பலன்கள் அவருக்கு மறுக்கப்படக்கூடும்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 217-இன் கீழ், ஓா் உயா்நீதிமன்ற நீதிபதி கைப்பட எழுதிய ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் அலுவலகத்துக்கு அனுப்பினால் போதுமானது. அதற்கு ஒப்புதல் எதுவும் தேவையில்லை’ என்றனா்.

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதா் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை! ஒடிஸா அரசு முடிவு

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்று... மேலும் பார்க்க

நேரடியாகக் கேட்கலாம்! - ராகுலுக்கு தோ்தல் ஆணையம் பதில்

தோ்தல் விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 2024 மகாராஷ்டிர சட்... மேலும் பார்க்க

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்!

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இதுதொடா்பாக இந்திய ராணுவ உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியத... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் மட்டும் 51% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளன. மத்திய தொழில் மற்றும் உள்வா்த்தக மேம்பாட்டுத் துறை அண்மையில் வெ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை மூண்டது. அரம்பாய் தெங்கோல் முக்கியத் தல... மேலும் பார்க்க