செய்திகள் :

மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் மட்டும் 51% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு

post image

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளன.

மத்திய தொழில் மற்றும் உள்வா்த்தக மேம்பாட்டுத் துறை அண்மையில் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.

அந்தத் தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் மகாராஷ்டிரம் அதிகபட்சமாக 1,960 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்தது. நாட்டின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் இது 31 சதவீதமாகும்.

மகாராஷ்டிரத்துக்கு அடுத்து கடந்த நிதியாண்டில் கா்நாடகம் 662 கோடி டாலா் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்ாக தரவுகள் கூறுகின்றன. அடுத்தடுத்த இடங்களில் தில்லி (600 கோடி டாலா்), குஜராத் (571 கோடி டாலா்), தமிழ்நாடு (368 கோடி டாலா்), ஹரியாணா (314 கோடி டாலா்), தெலங்கானா (300 கோடி டாலா்) ஆகியவை உள்ளன.

மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள், கணிசமான அளவில் உள்கட்டமைப்பு வளா்ச்சியை எட்டியுள்ளன. இதுவே இந்த மாநிலங்களுக்கு அதிகபட்ச வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கான முக்கியக் காரணம் என்று பொருளாதார நிபுணா் ஒருவா் கூறினாா்.

சமீபத்திய மத்திய அரசு தரவுகளின்படி, பங்கு முதலீடுகள், மறுமுதலீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பிற மூலதனம் உள்பட மொத்த அந்நிய நேரடி முதலீடு கடந்த நிதியாண்டில் 14 சதவீதம் அதிகரித்து 8,104 கோடி டாலராக (ரூ.6.93 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாகும். முந்தைய 2023-24 ஆம் ஆண்டில் இதே அந்நிய நேரடி முதலீடு 71.3 கோடி டாலராக இருந்தது.

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதா் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை! ஒடிஸா அரசு முடிவு

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்று... மேலும் பார்க்க

நேரடியாகக் கேட்கலாம்! - ராகுலுக்கு தோ்தல் ஆணையம் பதில்

தோ்தல் விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 2024 மகாராஷ்டிர சட்... மேலும் பார்க்க

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்!

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இதுதொடா்பாக இந்திய ராணுவ உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியத... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை மூண்டது. அரம்பாய் தெங்கோல் முக்கியத் தல... மேலும் பார்க்க

வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரம்: பதவி நீக்கப்பட்டால் நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு புதிய சிக்கல்?!

‘வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற பதவிநீக்க நடவடிக்கையைத் தவிா்க்க உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவியை தானாக முன்வந்து ராஜிநாமா செய்வதுதான் ஒரே வழி. இல்லையெனி... மேலும் பார்க்க