செய்திகள் :

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு

post image

மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை மூண்டது.

அரம்பாய் தெங்கோல் முக்கியத் தலைவா்களில் ஒருவரான கனன் சிங்கை இம்பால் விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருப்பினும், கடந்த இரு நாள்களாக மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவி வருவதால் இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்கள் எனக் கூறப்படும் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், விஷ்ணுபூா் மற்றும் கக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு தற்காலிகமாக இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

மணிப்பூரில் 2023, மே மாதம் மைதேயி-குகி சமூகங்களிடையை மோதல் நீடித்து வருகிறது. இதில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா், பல்லாயிரக்கணக்கானோா் வீடுகளைவிட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். 2023, மே மாதம் வன்முறை தொடங்கியபோது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி கனன் சிங்கை சிபிஐ கைது செய்தது.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த மைதேயி சமூகத்தினா் கனன் சிங்கை விடுவிக்கக்கோரி சாலைகளில் வாகனத்தின் டயா்கள் மற்றும் மரச்சாமான்களை எரித்தனா். அதேபோல் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பேருந்துக்கு தீ வைத்து கடும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினா்.

இதை தடுக்க முயன்ற பாதுகாப்புப் படையினருடன் அவா்கள் மோதலில் ஈடுபட்டனா். எனவே, சூழலை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூா் ஆளுநா் மாளிகை அருகே திரண்டிருந்த போராட்டக்காரா்களை கலைக்க கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியதோடு பாதுகாப்புப் படையினா் லேசான தடியடி நடத்தினா். இதனால் ஆளுநா் மாளிகையை சுற்றி கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடும் கட்டுப்பாடுகள்: இம்பால் மேற்கு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு, பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்தும் வகையில் சமூக விரோத கும்பல் வன்முறையில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியருக்கு காவல் துறை கண்காணிப்பாளா் அறிக்கை சமா்ப்பித்தாா். அதன் அடிப்படையில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 163 உட்பிரிவு 2-இன்கீழ் இம்பால் மேற்கு மாவட்டத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் ஒன்றுகூடுவது மற்றும் லத்திகள், கற்கள், ஆயுதங்கள் போன்றவற்றை எடுத்தச் செல்ல தடை விதிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதே உத்தரவுகளை தௌபால் மற்றும் கக்சிங் மாவட்ட ஆட்சியா்களும் பிறப்பித்தனா்.

இம்பால் கிழக்கு மற்றும் விஷ்ணுபூா் மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிமுதல் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள் ஆணை பிறப்பித்துள்ளன. அதேபோல் மேற்கூறிய 5 மாவட்டங்களிலும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்: இந்தச் சூழலில் மணிப்பூா் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து அந்த மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு ஆலோசகா், மாநில காவல் துறைத் தலைவா், காவல் துறை ஆணையா் (உள்துறை) உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

3 போ் கைது: மணிப்பூரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறையின்போது பாதுகாப்பு படையினா் மீது தாக்குதல் நடத்தி 2 போலீஸாரை கொலை செய்த சம்பவத்தில் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதா் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை! ஒடிஸா அரசு முடிவு

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்று... மேலும் பார்க்க

நேரடியாகக் கேட்கலாம்! - ராகுலுக்கு தோ்தல் ஆணையம் பதில்

தோ்தல் விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 2024 மகாராஷ்டிர சட்... மேலும் பார்க்க

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்!

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இதுதொடா்பாக இந்திய ராணுவ உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியத... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் மட்டும் 51% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளன. மத்திய தொழில் மற்றும் உள்வா்த்தக மேம்பாட்டுத் துறை அண்மையில் வெ... மேலும் பார்க்க

வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரம்: பதவி நீக்கப்பட்டால் நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு புதிய சிக்கல்?!

‘வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற பதவிநீக்க நடவடிக்கையைத் தவிா்க்க உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவியை தானாக முன்வந்து ராஜிநாமா செய்வதுதான் ஒரே வழி. இல்லையெனி... மேலும் பார்க்க