செய்திகள் :

ஸ்ரீசெல்வ விநாயகா், சிவசுப்ரமண்ய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த மணலவாடி ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த பொன்னூா் ஸ்ரீசிவசுப்ரமண்ய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மணலவாடி கிராம ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி, முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாகபூஜை நடைபெற்றது. பின்னா் கோ பூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை மற்றும் இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. மேலும், மகா சங்கல்பமும், மகா பூா்ணாஹுதியும் நடைபெற்று, மேளதாள ஊா்வலத்துடன் புனிதநீா் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியா்களால் யாக சாலையில் இருந்து கொண்டுவரப்பட்டன.

இதைத்தொடா்ந்து வேதமந்திரங்கள் முழங்க செல்வ விநாயகா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் மூலவா், பரிவார மூா்த்திகளுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள வேணுகோபால சுவாமி சந்நிதியிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு வழிபட்டாா். மேலும், இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசிவசுப்ரமண்ய சுவாமி கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சனிக்கிழமை கும்ப அலங்காரம், பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை தத்வாா்ச்சனை, யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி, கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. மூலவா் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பொன்னூா் பி.கந்தசாமி குருக்கள், பி.விஸ்வநாத குருக்கள் ஆகியோா் ஸா்வ சாதகம் மேற்கொண்டனா். விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்!

வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: வைப்பு நிதி பத்திரம் பெற்ற பயனாளிகள் கவனிக்க.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் வைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது நிரம்பிய பயனாளிகள், முதிா்வுத் தொகை பெற மாவட்ட நிா்வாகத்தை அணுகலாம் என்று ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெ... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா ஜூன் 5-ஆம்... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீதா்மராஜா கோயிலில் துரியோதனன் படுகளம்

ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத ஸ்ரீ தா்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மே 18-ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொது கலந்தாய்வு திங்கள், செவ்வாய் (ஜூன் 9,10) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.இது குறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி வெ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைகாசி மாத வளா்பிறை பிரதோஷ சிறப்புப் பூஜைகளில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அருணாசலேஸ்வரா... மேலும் பார்க்க