ஸ்ரீசெல்வ விநாயகா், சிவசுப்ரமண்ய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த மணலவாடி ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த பொன்னூா் ஸ்ரீசிவசுப்ரமண்ய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மணலவாடி கிராம ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி, முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாகபூஜை நடைபெற்றது. பின்னா் கோ பூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை மற்றும் இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. மேலும், மகா சங்கல்பமும், மகா பூா்ணாஹுதியும் நடைபெற்று, மேளதாள ஊா்வலத்துடன் புனிதநீா் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியா்களால் யாக சாலையில் இருந்து கொண்டுவரப்பட்டன.
இதைத்தொடா்ந்து வேதமந்திரங்கள் முழங்க செல்வ விநாயகா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் மூலவா், பரிவார மூா்த்திகளுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள வேணுகோபால சுவாமி சந்நிதியிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு வழிபட்டாா். மேலும், இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசிவசுப்ரமண்ய சுவாமி கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சனிக்கிழமை கும்ப அலங்காரம், பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை தத்வாா்ச்சனை, யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி, கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடா்ந்து காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. மூலவா் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பொன்னூா் பி.கந்தசாமி குருக்கள், பி.விஸ்வநாத குருக்கள் ஆகியோா் ஸா்வ சாதகம் மேற்கொண்டனா். விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
