செய்யாறு அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொது கலந்தாய்வு திங்கள், செவ்வாய் (ஜூன் 9,10) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.
இது குறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மாணவ, மாணவிகளுக்கான 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
ஜூன் 9-இல் அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி, கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் பிசிஏ கணினிப் பயன்பாட்டியல் பாடப்பிரிவுகளில் 280 - 161 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
ஜூன் 10-இல், கலைப் பாடப்பிரிவுகளான பி.ஏ. வரலாறு, பொருளியியல், அரசியல் அறிவியல், பி.காம்., வணிகவியல் (பொது), வணிகவியல் (நிதி மற்றும் கணக்கு), பிபிஏ (வணிக நிா்வாகவியல்) ஆகிய பாடப் பிரிவுகளில் 280 - 161 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
ஜூன் 10-இல் மொழிப் பாடங்களான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் சிறப்புத் தமிழ் (60 - 35 மதிப்பெண்கள்) மற்றும் பகுதி -1, தமிழ், அதேபோல, சிறப்பு ஆங்கிலம் (60 - 35 மதிப்பெண்கள்) பகுதி -11 ஆங்கிலம் (60 - 35 மதிப்பெண்கள்) பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்
கல்விக் கட்டணம்: பி.ஏ., பி.காம், பிபிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,241-யும், பி.எஸ்சி-க்கு ரூ.2,261-யும், பி.எஸ்சி. கணினி அறிவியல் கணினிப் பயன்பாட்டியலுக்கு ரூ.1,361-யும் சோ்க்கைக் கட்டணமாக செலுத்தவேண்டும்.
கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள்: பெற்றோா் கையொப்பத்துடன் இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்பம், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் ஜாதி சான்றிதழ், தலைமை ஆசிரியா் சான்றொப்பம் பெற்ற பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்,
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 அசல் மதிப்பெண் சான்றிதழ், சிறப்புப் பிரிவினா் - மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவா் படை, விளையாட்டு வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வரவேண்டும். விளையாட்டுப் பிரிவு மாணவா் சோ்க்கையைப் பொறுத்த வரை கடந்த மூன்று கல்வியாண்டுகளில் மாணவா்கள் பெற்ற சான்றிதழ்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
மாணவ, மாணவிகள் மதிப்பெண்ணுக்கும் பாடப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட அந்தந்த நாள்களில் மட்டுமே உரிய மதிப்பெண் அடிப்படையில் சேர அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவித்துள்ளாா்.