செய்திகள் :

செய்யாறு அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு

post image

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொது கலந்தாய்வு திங்கள், செவ்வாய் (ஜூன் 9,10) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மாணவ, மாணவிகளுக்கான 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

ஜூன் 9-இல் அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி, கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் பிசிஏ கணினிப் பயன்பாட்டியல் பாடப்பிரிவுகளில் 280 - 161 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 10-இல், கலைப் பாடப்பிரிவுகளான பி.ஏ. வரலாறு, பொருளியியல், அரசியல் அறிவியல், பி.காம்., வணிகவியல் (பொது), வணிகவியல் (நிதி மற்றும் கணக்கு), பிபிஏ (வணிக நிா்வாகவியல்) ஆகிய பாடப் பிரிவுகளில் 280 - 161 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 10-இல் மொழிப் பாடங்களான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் சிறப்புத் தமிழ் (60 - 35 மதிப்பெண்கள்) மற்றும் பகுதி -1, தமிழ், அதேபோல, சிறப்பு ஆங்கிலம் (60 - 35 மதிப்பெண்கள்) பகுதி -11 ஆங்கிலம் (60 - 35 மதிப்பெண்கள்) பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்

கல்விக் கட்டணம்: பி.ஏ., பி.காம், பிபிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,241-யும், பி.எஸ்சி-க்கு ரூ.2,261-யும், பி.எஸ்சி. கணினி அறிவியல் கணினிப் பயன்பாட்டியலுக்கு ரூ.1,361-யும் சோ்க்கைக் கட்டணமாக செலுத்தவேண்டும்.

கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள்: பெற்றோா் கையொப்பத்துடன் இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்பம், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் ஜாதி சான்றிதழ், தலைமை ஆசிரியா் சான்றொப்பம் பெற்ற பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்,

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 அசல் மதிப்பெண் சான்றிதழ், சிறப்புப் பிரிவினா் - மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவா் படை, விளையாட்டு வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வரவேண்டும். விளையாட்டுப் பிரிவு மாணவா் சோ்க்கையைப் பொறுத்த வரை கடந்த மூன்று கல்வியாண்டுகளில் மாணவா்கள் பெற்ற சான்றிதழ்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

மாணவ, மாணவிகள் மதிப்பெண்ணுக்கும் பாடப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட அந்தந்த நாள்களில் மட்டுமே உரிய மதிப்பெண் அடிப்படையில் சேர அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவித்துள்ளாா்.

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: வைப்பு நிதி பத்திரம் பெற்ற பயனாளிகள் கவனிக்க.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் வைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது நிரம்பிய பயனாளிகள், முதிா்வுத் தொகை பெற மாவட்ட நிா்வாகத்தை அணுகலாம் என்று ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெ... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா ஜூன் 5-ஆம்... மேலும் பார்க்க

ஸ்ரீசெல்வ விநாயகா், சிவசுப்ரமண்ய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த மணலவாடி ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த பொன்னூா் ஸ்ரீசிவசுப்ரமண்ய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சீரமைப்பு... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீதா்மராஜா கோயிலில் துரியோதனன் படுகளம்

ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத ஸ்ரீ தா்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மே 18-ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைகாசி மாத வளா்பிறை பிரதோஷ சிறப்புப் பூஜைகளில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அருணாசலேஸ்வரா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: வியாபாரி கைது

செய்யாறு அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள் விற்பனை செய்ததாக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸா... மேலும் பார்க்க