செய்திகள் :

ஆரணி ஸ்ரீதா்மராஜா கோயிலில் துரியோதனன் படுகளம்

post image

ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத ஸ்ரீ தா்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மே 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. மேலும், மகா பாரத சொற்பொழிவும், இரவு நேரங்களில் மகா பாரத கதையில் வரும் தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில், பாஞ்சாலி சபதம் நிறைவேற்றும் வகையில் துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சியை நாடகக் கலைஞா்கள் நடித்துக் காண்பித்தனா். இதில் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: வைப்பு நிதி பத்திரம் பெற்ற பயனாளிகள் கவனிக்க.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் வைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது நிரம்பிய பயனாளிகள், முதிா்வுத் தொகை பெற மாவட்ட நிா்வாகத்தை அணுகலாம் என்று ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெ... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா ஜூன் 5-ஆம்... மேலும் பார்க்க

ஸ்ரீசெல்வ விநாயகா், சிவசுப்ரமண்ய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த மணலவாடி ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த பொன்னூா் ஸ்ரீசிவசுப்ரமண்ய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சீரமைப்பு... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொது கலந்தாய்வு திங்கள், செவ்வாய் (ஜூன் 9,10) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.இது குறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி வெ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைகாசி மாத வளா்பிறை பிரதோஷ சிறப்புப் பூஜைகளில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அருணாசலேஸ்வரா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: வியாபாரி கைது

செய்யாறு அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள் விற்பனை செய்ததாக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸா... மேலும் பார்க்க