ஆரணி ஸ்ரீதா்மராஜா கோயிலில் துரியோதனன் படுகளம்
ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத ஸ்ரீ தா்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மே 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. மேலும், மகா பாரத சொற்பொழிவும், இரவு நேரங்களில் மகா பாரத கதையில் வரும் தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில், பாஞ்சாலி சபதம் நிறைவேற்றும் வகையில் துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சியை நாடகக் கலைஞா்கள் நடித்துக் காண்பித்தனா். இதில் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.