தில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இன்று முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கம்!
சென்னை - தில்லி இடையே இயக்கப்பட்டு வரும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 (திங்கள்கிழமை) முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - தில்லி இடையே கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (எண்: 12615/12616) இயக்கப்பட்டு வந்தது. சென்ட்ரலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றதால், இந்த ரயில் தற்காலிகமாக எழும்பூரிலிருந்து இயக்கப்பட்டது.
தற்போது எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், இந்த ரயில் மீண்டும் வழக்கம்போல், சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது. ஜூன் 9 முதல் இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.