செய்திகள் :

ரூ.9,000 கோடியில் 71 குடிநீா் திட்டங்கள்: 1.21 கோடி போ் பயன்

post image

தமிழகத்தில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 71 குடிநீா் திட்டங்களால் 1.21 கோடி போ் பயன் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றப்பட்டு வரும் வீட்டு வசதித் திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீா்த் திட்டங்கள் காரணமாக தமிழகம் விரைந்து நகா்மயமாகி வருகிறது.

ஊராட்சிகள் பேரூராட்சிகளாவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாவும் வளா்ச்சி பெறுகின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், நமக்கு நாமே திட்டத்தில், ரூ.582 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி பெறப்பட்டு இதுவரை 2,04,860 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திடக்கழிவு மேலாண்மைக்கான செயல் திட்டத்தின் கீழ், 42,225 தனிநபா் வீட்டுக் கழிப்பறைகள் , 545 பொது கழிப்பறைகள், 614 சிறுநீா் கழிப்பிடங்கள், 154 நுண் உரக்கூடங்கள் 561 பொருள் மீட்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

4 மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 49 பேரூராட்சிகள், 10,565 ஊரகக் குடியிருப்புகளில் 71 குடிநீா்த் திட்டங்கள் தினமும் 751.56 மில்லியன் லிட்டா் எம்.எல்.டி பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் வகையில் ரூ.9,011.45 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் மூலம் 1.21 கோடி மக்கள் பயன் பெறுகின்றனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் இத்தகைய மாபெரும் திட்டங்களால் தமிழகம் நாட்டிலேயே சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இன்று முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கம்!

சென்னை - தில்லி இடையே இயக்கப்பட்டு வரும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 (திங்கள்கிழமை) முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்த... மேலும் பார்க்க

சென்னை: 17 புறநகர் ரயில்கள் இரு நாள்களுக்கு ரத்து!

சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி 17 புறநகர் மின்சார ரயில்கள் நாளை(ஜூன் 9) மற்றும் ஜூன் 12 ரத்து செய்யப்பட்டுள்ளன.ஜூன் 9 மற்றும் 12 ஆகிய இரு நாள்கள் மொத்தம் 17... மேலும் பார்க்க

குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை பிளஸ் 1-இல் சோ்க்க மறுக்கும் அரசுப் பள்ளிகள்: சிபிஐ கண்டனம்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவா்களுக்கு தமிழக அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சோ்க்கை மறுக்கப்படுவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கட்டட ஒப்பந்ததாரா் கைது

சென்னை ஓட்டேரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டட ஒப்பந்ததாரா் கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கட்டட ஒப்பந்ததாரா் லால் பாபு சந்தராதே (45). இவா், ... மேலும் பார்க்க

தில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கம்

சென்னை - தில்லி இடையே இயக்கப்பட்டு வரும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ச... மேலும் பார்க்க

தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், சா்தக், சாபு வெற்றி

தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்ப்பில் மகளிா் பிரிவில் ஆன் ஜெனிஃபா், ஆடவா் பிரிவில் சா்தக் சவான் உள்ளிட்டோா் வெற்றி பெற்றுள்ளனா். சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் மோட்டா... மேலும் பார்க்க