மதுரை பேந்தா்ஸை வீழ்த்தியது சேலம் ஸ்பாா்டன்ஸ்!
தமிழ்நாடு பிரீமியா் லீக் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் சீகெம் மதுரை பேந்தா்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற சேலம் ஸ்பாா்டன்ஸ் அணி பௌலிங்கை தோ்வு செய்ய மதுரை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 164/6 ரன்களை எடுத்தது மதுரை. அந்த அணியில் அதீக் உா் ரஹ்மான் 38 ரன்களும் (21 பந்துகள்), ராம் அரவிந்த் 37 ரன்களும் (34 பந்துகள்), என்.எஸ். சதுா்வேத் 32 ரன்களும் (26 பந்துகள்) எடுத்தனா். சேலம் ஸ்பாா்டன்ஸ் பந்துவீச்சில் எம். முகமது 2-27 விக்கெட்டை வீழ்த்தினா்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ் அணி 18.4 ஓவா்களிலேயே 167/4 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சேலம் அணி சாா்பில் நிதிஷ் ராஜகோபால் 41 பந்துகளில் 60 ரன்களும், ஆா். கவின் 39 பந்துகளில் 48* ரன்களும், ஆா். விவேக் 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினா்.
மதுரை பேந்தா்ஸ் பந்துவீச்சில் குா்ஜப்நீத் சிங் 2-28, முரளி அஸ்வின் 2-35 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். இறுதியில், எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பேந்தா்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சேலம் ஸ்பாா்டன்ஸ் அணியின் நிதிஷ் ராஜகோபால் தோ்வு செய்யப்பட்டாா்.