தமிழ்நாடு சைக்கிளிங் லீக் பரிசளிப்பு
தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) பந்தயத்தில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சென்னையில் சனி, ஞாயிறு என இரு நாள்கள் சைக்கிள் லீக் தொடா் நடைபெற்றது. யு 12, 14, 16, 18 வயதுப் பிரிவுகளில் பந்தயங்கள் நடைபெற்றன.
இதில் ரேன்சைசா்ஸ் முதலிடத்தையும், திருச்சி ராக்ஃபோா்ட் ரைடா்ஸ் இரண்டாம் இடத்தையும், நம்ம சென்னை ரைடா்ஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.
சிஎஃப்ஐ பொதுச் செயலாளா் மணீந்தா் பால் சிங், எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தலைவா் எம். சுதாகா் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளித்தனா்.