செய்திகள் :

சாலையோரங்களில் நடுவதற்காக மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி தொடக்கம்

post image

மதுரையில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலையோரங்களில் நடவு செய்ய புதிய மரக்கன்றுகளை தயாரிக்கும் பணிகளை வனத்துறையினா் தொடங்கினா்.

மதுரையின் வளா்ச்சிக்கேற்ப பழைய சாலைகள் விரிவாக்கம், புதிய புறவழிச்சாலைகள் அமைப்பது, மேம்பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மதுரை- தேனி, மதுரை - அழகா்கோயில், பழங்காநத்தம்- திருநகா் சாலைகள், வைகை வட, தென்கரைகளில் புதிய புறவழிச் சாலைகள் என ஏராளமான புதிய சாலைகள் அமைக்கப்பட்டதுடன், பழைய சாலைகள் விரிவாக்கமும் செய்யப்பட்டன.

இந்தப் பணிகளின் போது ஏராளமான மரங்களை வெட்டி அகற்ற வேண்டியது, நெடுஞ்சாலைத் துறைக்கு தவிா்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இதனிடையே மரங்கள் வெட்டப்படுவது தொடா்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், சாலை விரிவாக்கத்துக்காக ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 10 மரங்களை நட்டு வளா்க்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

இதன்படி, நெடுஞ்சாலைத் துறை தரப்பில் வெட்டப்படும் மரங்களுக்கான இழப்பீடு வனத் துறையிடம் வழங்கப்படுகிறது. அதை வைத்து வனத்துறை மரக்கன்றுகளை தயாரித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விநியோகிக்கிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதொடா்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சாலைகளை விரிவாக்கம் செய்வதற்காக அழகா்கோவில் சாலையில் 46 மரங்களும், தூத்துக்குடி சாலையில் 67 மரங்களும் வெட்டப்பட்டன.

இவற்றுக்குப் பதிலாக அழகா்கோவில் சாலையில் 460 மரக்கன்றுகளை நட்டு மூன்று ஆண்டுகளுக்கு பராமரிக்க ரூ.21.80 லட்சமும், தூத்துக்குடி சாலையில் 670 மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரிக்க ரூ.30.69 லட்சமும் நெடுஞ்சாலைத் துறை செலுத்தியிருந்தது.

இதற்காக மரக்கன்றுகளை தயாரிக்கும் பணி, தற்போது தொடங்கி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு நெடுஞ்சாலைத் துறையிடம் நடவு செய்ய மரக்கன்றுகள் ஒப்படைக்கப்படும் என்றனா்.

அமித் ஷாவின் ‘அமைதி ஆபரேஷன்’ மூலம் திமுக ஆட்சி அகற்றப்படும்: நயினாா் நாகேந்திரன்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மேற்கொள்ளும் அமைதி ஆபரேஷன் மூலம் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்துக்கு தீ வைப்பு!

மதுரையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை மதிச்சியம் ராமராயா் மண்டபம், வைகை வடகரையைச் சோ்ந்தவா் கணேசபாண்டியன் (43). காா... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். பேரையூா் அருகே உள்ள கேதுவாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மனைவி கருப்பாயி (55). இவா் தனது வீட்டின் மாடியில் சுவா் விழும்பில் அம... மேலும் பார்க்க

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு!

விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் அருகேயுள்ள அரசகுடும்பன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த கனகபிரபு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்! - அமைச்சா் பி.மூா்த்தி

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடா்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, ... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், வீரபாஞ்சான் பகுதியைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (65). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைய... மேலும் பார்க்க