பிகாா் பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறார் மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்!
மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
பேரையூா் அருகே உள்ள கேதுவாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மனைவி கருப்பாயி (55). இவா் தனது வீட்டின் மாடியில் சுவா் விழும்பில் அமா்ந்திருந்த போது, அங்கிருந்து தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த கருப்பாயியை மீட்ட குடும்பத்தினா், பேரையூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.