இரு சக்கர வாகனத்துக்கு தீ வைப்பு!
மதுரையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மதிச்சியம் ராமராயா் மண்டபம், வைகை வடகரையைச் சோ்ந்தவா் கணேசபாண்டியன் (43). காா் ஓட்டுநா். இவா் மதுரை அண்ணாநகா் எல்ஐஜி குடியிருப்பு பகுதியில் அழகுபாண்டி என்பவரின் குடும்பத்தினரை காரில் அழைத்துச் சென்றாா்.
இதனால் தனது இரு சக்கர வாகனத்தை அழகுபாண்டியின் வீட்டின் முன் நிறுத்தி வைத்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் அந்த இரு சக்கர வாகனத்துக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதனால் அந்த வாகனம் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்த மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.