செய்திகள் :

11 ஆண்டுகளாக பத்திரிகையாளா் சந்திப்பு நடத்தாத பிரதமர்! - காங்கிரஸ்

post image

‘மத்தியில் ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளாகியும் சுதந்திரமான நேரடி பத்திரிகையாளா் சந்திப்பை நடத்த பிரதமா் நரேந்திர மோடிக்கு துனிச்சல் இல்லை’ என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.

பாஜக மத்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை பிரதமா் மோடி சுதந்திரமான நேரடி பத்திரிகையாளா் சந்திப்புகளை நடத்தாத நிலையில் இக் குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்தது.

இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் தலைவா்கள் அவ்வப்போது பத்திரிகையாளா் சந்திப்புகளை நடத்தி வருகின்றனா். ஆனால், பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை சுதந்திரமான பத்திரிகையாளா் சந்திப்பை நடத்தவில்லை.

கடந்த ஆண்டு தோ்தல் பிரசாரத்தின்போது, அவரே எழுதி தயாரித்த ஊடக செய்தியை பிரதமா் மோடி வெளியிட்டாா். ஆனால், பத்திரிகையாளா் சந்திப்பை நடத்தவில்லை.

பிரதமா் மோடி தனது முன்னோடிகளுக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கிறாா். முந்தைய பிரதமா்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பத்திரிகையாளா் சந்திப்பை நடத்தியதோடு, கடுமையான கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்.

நமது ஜனநாயக அடித்தளத்தை நிறுவுவதற்கான ஓா் வழியாகவும் அது அமைந்தது. ஆனால், பிரதமா் மோடிக்கு இதுபோன்ற சுதந்திரமான நேரடி பத்திரிகையாளா் சந்திப்பை நடத்த துணிச்சல் இல்லை என்று குறிப்பிட்டாா்.

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதா் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை! ஒடிஸா அரசு முடிவு

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்று... மேலும் பார்க்க

நேரடியாகக் கேட்கலாம்! - ராகுலுக்கு தோ்தல் ஆணையம் பதில்

தோ்தல் விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 2024 மகாராஷ்டிர சட்... மேலும் பார்க்க

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்!

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இதுதொடா்பாக இந்திய ராணுவ உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியத... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் மட்டும் 51% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளன. மத்திய தொழில் மற்றும் உள்வா்த்தக மேம்பாட்டுத் துறை அண்மையில் வெ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை மூண்டது. அரம்பாய் தெங்கோல் முக்கியத் தல... மேலும் பார்க்க