செய்திகள் :

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம்: இந்திய விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்! அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்

post image

அமெரிக்காவுடனான வேளாண் வா்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் கூறினாா்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வேளாண் வா்த்தகத்தை விரிவுபடுத்துவது தொடா்பாக, இரு நாடுகளிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. தங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கவும், இந்திய சந்தையில் தங்களின் வேளாண் மற்றும் தோட்டக்கலை உற்பத்திப் பொருள்களை கூடுதலாக அனுமதிக்கவும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

ஆனால், உள்நாட்டு வேளாண் உற்பத்தியாளா்களிடம் எதிா்ப்பை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்பதாலும், உலகளாவிய விலை ஏற்ற-இறக்கத்திலிருந்து அவா்களை பாதுகாக்கவும், தனது வேளாண் மற்றும் பால் பொருள்கள் சந்தையை அமெரிக்காவுக்கு முழுமையாகத் திறப்பதில் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பான கேள்விக்கு அமைச்சா் சௌஹான் பதிலளித்ததாவது: அமெரிக்காவுடனான வேளாண் வா்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியா கண்ணை மூடிக்கொண்டு செயல்படாது. நமக்கான லாப-நஷ்ட கணக்குகளை மதிப்பீடு செய்த பிறகே, ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.

அந்த வகையில், இந்திய விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதில் தெளிவாக இருக்கிறோம். இரு நாடுகள் குறித்து பேசும்போது, ஒட்டுமொத்தமாக வா்த்தகத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வேளாண் வா்த்தக ஒப்பந்தம், நடப்பாண்டு செப்டம்பா் - அக்டோபரில் கையொப்பமாகலாம் என கணிக்கப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்ட விரிவான வரையறைகள் தொடா்பாக இருதரப்பும் விரைவில் ஒப்புக்கொள்ளும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

நீதி ஆயோக் அறிக்கையின்படி, 2024 இறுதி வரையிலான 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் மற்றும் துணை உற்பத்திப் பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.1.9 லட்சம் கோடியாக உள்ளது. அதே காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய வேளாண் உற்பத்திப் பொருள்களின் மதிப்பு ரூ.4.9 லட்சம் கோடியாகும்.

பதப்படுத்தப்பட்ட இறால், பாசுமதி அரிசி, மசாலா பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவு தானியங்கள் போன்றவை, அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இந்தியாவின் பிரதான வேளாண் உற்பத்திப் பொருள்களாக உள்ளன.

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதா் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை! ஒடிஸா அரசு முடிவு

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்று... மேலும் பார்க்க

நேரடியாகக் கேட்கலாம்! - ராகுலுக்கு தோ்தல் ஆணையம் பதில்

தோ்தல் விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 2024 மகாராஷ்டிர சட்... மேலும் பார்க்க

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்!

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இதுதொடா்பாக இந்திய ராணுவ உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியத... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் மட்டும் 51% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளன. மத்திய தொழில் மற்றும் உள்வா்த்தக மேம்பாட்டுத் துறை அண்மையில் வெ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை மூண்டது. அரம்பாய் தெங்கோல் முக்கியத் தல... மேலும் பார்க்க