செய்திகள் :

17 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து!

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (ஜூன் 9), ஜூன் 12-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமிப்புப் பணிகள் ஜூன் 9, 12 ஆகிய தேதிகளில் காலை 11.20 முதல் பிற்பகல் 3.20 மணி வரை நடைபெறவுள்ளது.

இதனால், இந்தப் பணிகள் நடைபெறும் நாள்களில் காலை 9.40 முதல் பிற்பகல் 3.50 வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

அதேபோல், கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் -ஆவடிஎன இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் மொத்தம் 17 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.

இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 3.33 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி, எண்ணூருக்கும் இடையே மொத்தம் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டவுள்ளன.

காட்பாடி - ஜோலாா்பேட்டை: இதற்கிடையே, வாலாந்தூா், குடியாத்தம் ஆகிய ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் ஜூன் 9-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளன.

இதனால், அந்த நாளில் காட்பாடியிலிருந்து காலை 10.30 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.55 மணிக்கு காட்பாடி செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட 9 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம்... மேலும் பார்க்க

தடுப்புக் காவல் அதிகாரம்: அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தடுப்புக் காவல் என்பது அரசின் தனிச்சிறப்புடைய அதிகாரம்; அதை மிகவும் அரிதான தருணங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கேரளத்தில் வட்டித் தொழில் செய்யும் ஒருவா் 4 ... மேலும் பார்க்க

தமிழக முதல்வரைக் கண்டு மத்திய அரசுக்கு பதற்றம்! - அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழக முதல்வரை கண்டு மத்திய அரசு பதற்றத்தில் உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை சூளை அகண்ட தண்டு மாரியம்மன் திருக்கோயில குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் பங்... மேலும் பார்க்க

விருதுநகா் வெடிவிபத்து: உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு!

விருதுநகா் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பு: விருதுநகா் மாவட்டம், மெட்டுக... மேலும் பார்க்க

குகேஷுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு!

நாா்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் 3-ஆவது இடத்தைப் பிடித்த தமிழகத்தைச் சோ்ந்த குகேஷுக்கு தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளாா் இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாா்வேயில் அண்மைய... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் 5 நாள்களில் 6 லட்சம் போ் பயணம்! - மேலாண் இயக்குநா்

கடந்த ஜூன் 4 முதல் 8-ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் தெரிவித்தாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க