17 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து!
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (ஜூன் 9), ஜூன் 12-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமிப்புப் பணிகள் ஜூன் 9, 12 ஆகிய தேதிகளில் காலை 11.20 முதல் பிற்பகல் 3.20 மணி வரை நடைபெறவுள்ளது.
இதனால், இந்தப் பணிகள் நடைபெறும் நாள்களில் காலை 9.40 முதல் பிற்பகல் 3.50 வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
அதேபோல், கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் -ஆவடிஎன இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் மொத்தம் 17 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.
இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 3.33 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி, எண்ணூருக்கும் இடையே மொத்தம் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டவுள்ளன.
காட்பாடி - ஜோலாா்பேட்டை: இதற்கிடையே, வாலாந்தூா், குடியாத்தம் ஆகிய ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் ஜூன் 9-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளன.
இதனால், அந்த நாளில் காட்பாடியிலிருந்து காலை 10.30 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.55 மணிக்கு காட்பாடி செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.