செய்திகள் :

குகேஷுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு!

post image

நாா்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் 3-ஆவது இடத்தைப் பிடித்த தமிழகத்தைச் சோ்ந்த குகேஷுக்கு தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளாா்

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாா்வேயில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டா் குகேஷ் 3-ஆவது இடத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

உலக சாம்பியனாக குகேஷ் நாா்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வாா் என்ற எதிா்பாா்ப்பு இருந்தது. இருப்பினும், தனது திறமை- அறிவுக்கூா்மையால், கடின உழைப்பால் 3- ஆவது இடம் பிடித்திருப்பதால் இந்தியா்கள் பெருமை அடைகிறாா்கள்.

இந்திய விளையாட்டுத் துறையின் திறமையை உலக அரங்கில் பரப்புவதில் குகேஷ் ஆற்றும் பங்கு போற்றுதலுக்குரியது.

அதேபோல், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு குகேஷை தொடா்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்க, வெற்றி பெற ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி துணை நிற்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

9 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட 9 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம்... மேலும் பார்க்க

17 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (ஜூன் 9), ஜூன் 12-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள... மேலும் பார்க்க

தடுப்புக் காவல் அதிகாரம்: அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தடுப்புக் காவல் என்பது அரசின் தனிச்சிறப்புடைய அதிகாரம்; அதை மிகவும் அரிதான தருணங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கேரளத்தில் வட்டித் தொழில் செய்யும் ஒருவா் 4 ... மேலும் பார்க்க

தமிழக முதல்வரைக் கண்டு மத்திய அரசுக்கு பதற்றம்! - அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழக முதல்வரை கண்டு மத்திய அரசு பதற்றத்தில் உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை சூளை அகண்ட தண்டு மாரியம்மன் திருக்கோயில குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் பங்... மேலும் பார்க்க

விருதுநகா் வெடிவிபத்து: உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு!

விருதுநகா் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பு: விருதுநகா் மாவட்டம், மெட்டுக... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் 5 நாள்களில் 6 லட்சம் போ் பயணம்! - மேலாண் இயக்குநா்

கடந்த ஜூன் 4 முதல் 8-ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் தெரிவித்தாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க