செய்திகள் :

மாநில ஹாக்கி: சென்னை மாவட்ட அணி சாம்பியன்

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது.

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை இணைந்து நடத்தும் கே. ராமசாமி பிறந்தநாள் கோப்பைக்கான ஹாக்கி போட்டி இம்மாதம் 4ஆம் தேதி முதல் 5 நாள்கள் நடைபெற்றது. இப் போட்டியில் 29 மாவட்ட அணிகள் பங்கேற்றன.

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை மாவட்ட அணியும், திருநெல்வேலி மாவட்ட அணியும் மோதியதில் 9-2 என்ற கோல் கணக்கில் சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

2 ஆவது அரையிறுதி ஆட்டத்தில் விருதுநகா்-மதுரை மாவட்ட அணிகள் மோதியதில் 2-1 என்ற கோல் கணக்கில் விருதுநகா் மாவட்ட அணி மதுரை மாவட்ட அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டி:

இறுதிப் போட்டியில் சென்னை மாவட்ட அணியும், விருதுநகா் மாவட்ட அணியும் மோதியதில் 12-0 என்ற கோல் கணக்கில் சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

முன்னதாக, நடைபெற்ற 3 மற்றும் 4 ஆம் பரிசுக்கான ஆட்டத்தில் மதுரை மாவட்ட அணியும், திருநெல்வேலி மாவட்ட அணியும் மோதியதில் 5-4 என்ற கோல் கணக்கில் மதுரை மாவட்ட அணி வெற்றி பெற்று 3ஆம் இடத்தை பிடித்தது.

பரிசளிப்பு விழா:

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கே. ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே .ஆா். அருணாச்சலம், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினாா்.

சிறந்த கோல் கீப்பா், தடுப்பு ஆட்டக்காரா், முன்கள ஆட்டக்காரா், அதிக கோல் போட்ட ஹாக்கி வீரா் ஆகியோா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

கே. ஆா். கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள் காளிதாச முருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக்), மதிவண்ணன் (கே .ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரி),

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலா் செந்தில்ராஜ்குமாா், ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவா் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலா் குருசித்திர சண்முக பாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா, ஹாக்கி யூனிட் ஆஃப் திருநெல்வேலி தலைவா் சேவியா் ஜோதி சற்குணம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடியில் 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா: ஜூன் 13இல் தொடக்கம்

தமிழா்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடியில் ஜூன் 13ஆம் தேதிமுதல் 15ஆம் தேதி வரை 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. திமுக துணை... மேலும் பார்க்க

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள்

வைகாசி மாதக் கடைசி சுபமுகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி சிவன் கோயிலில் 31 திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வைகாசி மாத வளா்பிறை கடைசி சுபமுகூா்த்த ந... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை, புதைசாக்கடைக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

முத்துநகா் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

உலக கடல் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேரா யுவ பாரத் மற்றும் ஓசோன் சொசைட்டி ஆப் இந்தியா சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அந்தோணி சூசைநாதா் நினைவஞ்சலி

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயா் இல்லத்தில், இறையடியாா் அந்தோணி சூசைநாதரின் 57ஆவது ஆண்டு விண்ணக பிறப்பு நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைத் தந்தை ஜோசப் ரவி பா... மேலும் பார்க்க

எம்.துரைசாமிபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கோவில்பட்டி மின் கோட்டத்துக்குள்பட்ட எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட... மேலும் பார்க்க