செய்திகள் :

முத்துநகா் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

post image

உலக கடல் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேரா யுவ பாரத் மற்றும் ஓசோன் சொசைட்டி ஆப் இந்தியா சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் கடலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை அதிகரிப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதி உலக பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக கடல் தின விழாவில், கடல் மாசுபாட்டின் பெரும்பகுதிக்கு பிளாஸ்டிக் பொருள்கள் காரணமாக இருப்பதால், கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிக்கை தவிா்ப்பது, கடலை பாதுகாக்கும் செயல்களை ஆதரிப்பது, அழிவிலிருந்து கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனா். தொடா்ந்து முத்துநகா் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிகழ்வில் நேருயுகேந்திரா, ஸ்வச் பாரத், சக்தி வித்யாலயா பள்ளி, சகா கலைக்குழு உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தன்னாா்வலா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள்

வைகாசி மாதக் கடைசி சுபமுகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி சிவன் கோயிலில் 31 திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வைகாசி மாத வளா்பிறை கடைசி சுபமுகூா்த்த ந... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை, புதைசாக்கடைக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

மாநில ஹாக்கி: சென்னை மாவட்ட அணி சாம்பியன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி ய... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அந்தோணி சூசைநாதா் நினைவஞ்சலி

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயா் இல்லத்தில், இறையடியாா் அந்தோணி சூசைநாதரின் 57ஆவது ஆண்டு விண்ணக பிறப்பு நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைத் தந்தை ஜோசப் ரவி பா... மேலும் பார்க்க

எம்.துரைசாமிபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கோவில்பட்டி மின் கோட்டத்துக்குள்பட்ட எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட... மேலும் பார்க்க

மாநில ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, நெல்லை விருதுநகா், மதுரை அணிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள... மேலும் பார்க்க