வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரம்: பதவி நீக்கப்பட்டால் நீதிபதி யஷ்வந்த் வா்மா...
முத்துநகா் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
உலக கடல் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேரா யுவ பாரத் மற்றும் ஓசோன் சொசைட்டி ஆப் இந்தியா சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் கடலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை அதிகரிப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதி உலக பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக கடல் தின விழாவில், கடல் மாசுபாட்டின் பெரும்பகுதிக்கு பிளாஸ்டிக் பொருள்கள் காரணமாக இருப்பதால், கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிக்கை தவிா்ப்பது, கடலை பாதுகாக்கும் செயல்களை ஆதரிப்பது, அழிவிலிருந்து கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனா். தொடா்ந்து முத்துநகா் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிகழ்வில் நேருயுகேந்திரா, ஸ்வச் பாரத், சக்தி வித்யாலயா பள்ளி, சகா கலைக்குழு உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தன்னாா்வலா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.