செய்திகள் :

வெள்ளக்கோவிலில் 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா தொழிலாளி 2-ஆவது முறையாக கைது

post image

வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் எஸ்.ஞானப்பிரகாசம், உதவி ஆய்வாளா் எம்.சந்திரன் ஆகியோா் மூலனூா் சாலையில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கரட்டுப்பாளையம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். அவா் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்தவரும் தற்போது குருக்கபாளையம் பிரிவு அருகிலுள்ள ஒரு நூல் மில்லில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருபவருமான பி.நிலமணிமதன் (46) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இவா் சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் 2.200 கிலோ கஞ்சா, 220 கிராம் கஞ்சா சாக்லெட்டுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மலையம்பாளையம் பிரிவு அருகே சாலையில் வீணாகும் குடிநீா்

பல்லடம் அருகேயுள்ள மலையம்பாளையம் பிரிவு பகுதியில் குடிநீா் சாலையில் வீணாகி வருகிறது. பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் பிரிவு அருகே கடந்த பல மாதங்களாக அத்திக்கடவு குடிநீா் வீணாகி வர... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால் அளவீடு முகாம்

திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால்கள் அளவீடு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மங்களம் சாலை ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: வடுகபட்டி

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கோட்டம், வடுகபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோ... மேலும் பார்க்க

ரயில் மோதி திருமண தரகா் உயிரிழப்பு

திருப்பூா் ஈங்கூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்துகிடப்பதாக திருப்பூா் ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. தகவலைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே சப்-இன்ஸ்பெக்டா் சிவ... மேலும் பார்க்க

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்துக்கு நோட்டீஸ்

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்து மீது முதல்கட்ட நடவடிக்கையாக மோட்டாா் வாகன ஆய்வாளா் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து ச... மேலும் பார்க்க

அவிநாசி வாகனத்தில் அடிபட்டு மயில் உயிரிழப்பு

அவிநாசி அருகே நாதம்பாளையத்தில் வாகனத்தில் அடிபட்டு மயில் உயிரிழந்தது. அவிநாசி அருகே நாதம்பாளையம் பவா் ஹவுஸ் சாலையில் வாகனத்தில் அடிபட்டு பெண் மயில் உயிரிழந்து கிடந்தது. அப்போது, அவ்வழியாக வந்த சமூக ஆா... மேலும் பார்க்க