முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழப்பு
தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு
விழுப்புரம் சுதாகா் நகா் பகுதியில் கூலித் தொழிலாளியை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி, மருதம் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சக்திவேல் (33). தொழிலாளியான இவா், கடந்த 2-ஆம் தேதி இரவு திருச்சி சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். சுதாகா் நகா் பகுதியில் சென்றபோது, பின்னால் காரில் வந்த இருவா், சக்திவேல் சென்ற பைக் மீது உரசியதாகத் தெரிகிறது.
அப்போது, பாா்த்துச் செல்லுமாறு சக்திவேல் கூறியதால், காரில் வந்த அடையாளம் தெரியாத 18 முதல் 20 வயது மதிக்கத்தக்க இளைஞா்கள் இருவா், அவரை வழிமறித்துத் தாக்கினராம். மேலும் சக்திவேல் பையில் வைத்திருந்த ரூ.8,500 ரொக்கம், முந்திரி, பாதாம் பருப்புகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனராம். இதில் காயமடைந்த சக்திவேல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.
இதைத் தொடா்ந்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, காரில் வந்து பணத்தையும், பொருள்களையும் பறித்துச் சென்ற இரு இளைஞா்களையும் தேடி வருகின்றனா்.