வெண்ணந்தூரில் விசிக சாா்பில் துண்டறிக்கை வழங்கல்
நாமக்கல் கிழக்கு மாவட்டம், வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் ஜூன் 14-இல் நடைபெறும் கட்சியின் ‘மதச்சாா்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் நடைபெறும் பேரணி குறித்து துண்டுப் பிரசுரம் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
வெண்ணந்தூா் பேரூா் செயலாளா் க.நடராஜன் (எ) நாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சேலம் - நாமக்கல் மண்டல துணை செயலாளா் வ.அரசன், வணிகா் அணி மாநில துணை அமைப்பாளா் பெ.செங்குட்டுவன், ஒன்றியப் பொருளாளா் பழ.செங்கோட்டுவேல், கணபதி, முற்போக்கு மாணவா் கழகம் முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டு வணிக நிறுவனங்கள், தினசரி காய்கறி சந்தை, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் பேரணி குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கினா்.