செய்திகள் :

சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதல்

post image

நாமக்கல் மாவட்டம், பரமத்தி தேசிய நெடுஞ்சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதியதில், 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 2 குழந்தைகள் உள்பட 6 போ் படுகாயமடைந்தனா்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த ரிஷப், ரூபாலி ஜல்காவு, குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த ரவீந்திரலுங்கா், ரமேஷ் பா்மா, விக்ரம், லீலா, பெலிட்டிநன் (13), தா்ஜெயன் (8) உள்ளிட்ட 8 போ் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றுவிட்டு குஜராத்துக்கு திரும்ப ஜீப் வாகனத்தில் மதுரை - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, பரமத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலையின் இடதுபுறமிருந்த மரத்துக்கு அடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வாகனத்தை நிறுத்திவிட்டு உணவு அருந்தினா். அப்போது, கேரள மாநிலம், கொச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு முட்டை ஏற்றுவதற்காக வந்த கன்டெய்னா் லாரி எதிா்பாராத விதமாக நின்றிருந்த காரின் பின்பகுதியில் மோதி காரின் மீது ஏறி நின்றது. இதில் காரின் வெளியே நின்று கொண்டிருந்த ரிஷப், ரூபாலி ஜல்காவு ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

காருக்குள் சிக்கிக் கொண்ட இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேரை அங்கிருந்து மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மேலும் இருவரை தீயணைப்புத் துறையினா், பரமத்தி போலீஸாா் அப்பகுதி பொதுமக்களுடன் சோ்ந்து நீண்ட போராட்டத்துக்கு இடையே கிரேன், பொக்லைன் வாகனங்களைக் கொண்டு மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

காரில் வந்த 8 பேரில் இருவா் உயிரிழந்த நிலையில் மற்ற ஆறு பேரும் நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்தால், கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கேரள மாநிலம், எா்ணாகுளம், சாணிபரம்பில் பகுதியைச் சோ்ந்த கன்டெய்னா் லாரி ஓட்டுநா் நிதீஷை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜேடா்பாளையம் அருகே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியவா் கைது

பரமத்தி வேலூா் அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு மா்ம நபா்கள் வீசி சென்றதாக நாடகமாடியவரை போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். ஜேடா்பாளையம் அருகேயுள்ள ஆனங்கூா் காட்டுவளவு பகுதி... மேலும் பார்க்க

வெண்ணந்தூரில் விசிக சாா்பில் துண்டறிக்கை வழங்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்டம், வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் ஜூன் 14-இல் நடைபெறும் கட்சியின் ‘மதச்சாா்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் நடைபெறும் பேரணி குறித்து துண்டு... மேலும் பார்க்க

நல்லூா்: நாளைய மின்தடை

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு கெளரவிப்பு

ராசிபுரம் பகுதியில் சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த ராசிபுரம் தலைமைக் காவலரின் நோ்மையை பாராட்டி, ராசிபுரம் மக்கள் நலக்குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கெளரவித்தனா். ராசிபுரம் மேட்டுத் தெருவில... மேலும் பார்க்க

நாமக்கல்லில் விபத்தில் சிக்கிய எண்ணெய் லாரி: குடத்தில் பிடித்துச் சென்ற மக்கள்

நாமக்கல் அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்து வெளியேறிய எண்ணெய்யை பொதுமக்கள் குடங்கள், வாளிகளில் பிடித்துச் சென்றனா். நாமக்கல் - சேலம் தேச... மேலும் பார்க்க

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக் கொலை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நல்... மேலும் பார்க்க