செய்திகள் :

நாமக்கல்லில் விபத்தில் சிக்கிய எண்ணெய் லாரி: குடத்தில் பிடித்துச் சென்ற மக்கள்

post image

நாமக்கல் அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்து வெளியேறிய எண்ணெய்யை பொதுமக்கள் குடங்கள், வாளிகளில் பிடித்துச் சென்றனா்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, புதன்சந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டேங்கா் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் லாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில், லாரியின் பின்புறம் டேங்கா் சேதமடைந்து அதிலிருந்த எண்ணெய் கொட்டியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் குடம், வாளிகளில் எண்ணெய்யை பிடித்துச் சென்றனா்.

தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீஸாா், பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். மேலும், சாலையில் கொட்டிய எண்ணெய்யால் விபத்து ஏற்படாமல் தடுக்க மண்ணைக் கொட்டினா். இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு நாமக்கல் வழியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சோயா எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி, புதன்சந்தை மேம்பாலத்தின் மீது சென்றபோது திடீரென பழுதானதால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், டேங்கரில் இருந்து எண்ணெய் கீழே கொட்டியது. பொதுமக்கள் இந்த எண்ணெய்யை பிடித்துச் சென்ாக தெரியவந்துள்ளது. அந்த சோயா எண்ணெய்யானது சுத்திகரிக்கப்படாதது மற்றும் சமையலுக்கு உகந்தது அல்ல.

எனவே, அந்த எண்ணெய்யை பொதுமக்கள் யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளாா்.

ஜேடா்பாளையம் அருகே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியவா் கைது

பரமத்தி வேலூா் அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு மா்ம நபா்கள் வீசி சென்றதாக நாடகமாடியவரை போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். ஜேடா்பாளையம் அருகேயுள்ள ஆனங்கூா் காட்டுவளவு பகுதி... மேலும் பார்க்க

வெண்ணந்தூரில் விசிக சாா்பில் துண்டறிக்கை வழங்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்டம், வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் ஜூன் 14-இல் நடைபெறும் கட்சியின் ‘மதச்சாா்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் நடைபெறும் பேரணி குறித்து துண்டு... மேலும் பார்க்க

சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதல்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி தேசிய நெடுஞ்சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதியதில், 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 2 குழந்தைகள் உள்பட 6 போ் படுகாயமடைந்தனா். ம... மேலும் பார்க்க

நல்லூா்: நாளைய மின்தடை

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு கெளரவிப்பு

ராசிபுரம் பகுதியில் சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த ராசிபுரம் தலைமைக் காவலரின் நோ்மையை பாராட்டி, ராசிபுரம் மக்கள் நலக்குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கெளரவித்தனா். ராசிபுரம் மேட்டுத் தெருவில... மேலும் பார்க்க

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக் கொலை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நல்... மேலும் பார்க்க