செய்திகள் :

மாணவிக்கு பாலியல் தொல்லை: 'இனி அரசு சேவை இல்லங்களில் பெண் காவலர்கள் இருப்பார்கள்' - கீதா ஜீவன்

post image

தாம்பரம் அருகே உள்ள அரசு சேவை இல்லம் எனப்படும் மாணவியர் விடுதியில் தங்கி இருந்து 8வது வகுப்பு படித்து வரும்  மாணவிக்கு, அந்த விடுதியின்  காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

மாணவிக்கு  கால் முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் மேத்யூவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச்  சந்தித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்திருக்கிறார். “ 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை ஏற்க முடியாத ஒன்று. அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க உள்ளோம்.

மாணவி தைரியமாக அடையாளம் காட்டியதால்...

வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் இந்த குற்றச் சம்பவம் நடந்துள்ளது. மாணவி தைரியமாக அடையாளம் காட்டியதால் காவலாளி உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். சம்பவம் நடந்த விடுதியில் உடனே மூன்று பெண் காவலர்களை நியமிக்க சொல்லி இருக்கிறோம்.

 கீதா ஜீவன்
கீதா ஜீவன்

மற்ற மாணவிகளிடமும் நாங்கள் விசாரணை நடத்தினோம். ஆனால் அவர்கள் எல்லாம் விடுதி காவலர் மீது எந்தப் புகாரும் முன்வைக்கவில்லை.  இருப்பினும் முறைப்படி விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"தமிழ் கடவுள் முருகன் ஏமாற மாட்டார்; டெல்லி வேறு, தமிழ்நாடு வேறு"- அமித் ஷா பேச்சுக்கு திருமா பதில்

நேற்று (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடை பகுதியில் வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

`வீடு கொடுத்த அரசு வழிகொடுக்க மறந்தது ஏன்? - சாலை வசதியின்றி தவிக்கும் ஏப்பாக்கம் கிராம மக்கள்!

சுதந்திரம் இந்திய நாட்டிற்கு வேண்டுமானால் கிடைத்திருக்கலாம். ஆனால் இன்றுவரை பல கிராமங்களில் சாலை வசதியும் சுடுகாட்டிற்கு பாதையும் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டுதான் வருகின்றனர்.குறிப்பாக தலித் பழங்குடி... மேலும் பார்க்க

Amit Shah: `திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது என்கிறார் ஸ்டாலின்; உண்மைதான்! ஆனால்..' - அமித் ஷா

மதுரை ஒத்தக்கடையில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம்உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வருகை தந்திருக்கிறார். மதுரை வந்திருக்கும் அவர் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத்... மேலும் பார்க்க

One Day DC: 'என் வாழ்வில் மறக்கமாட்டேன்'- ஒரு நாள் துணை ஆணையராகப் பதவி வகித்த 10-ம் வகுப்பு மாணவி

ஒரு நாள் முதல்வர் பற்றிய கதைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், 10-ம் வகுப்பு மாணவி ஒரு நாள் துணை ஆணையராக பதவி வகித்த கதையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியான ஒரு நிகழ்வு ஹிமாச்சலப் பிரத... மேலும் பார்க்க

Bengaluru Stampede: ``மகனுக்காக நான் வாங்கிய இடத்திலேயே அவனது கல்லறை..'' - தந்தையின் சோகக் குரல்

ஐபிஎல்-லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தனது முதல் கோப்பையை வென்றதற்கு,கடந்த ஜூன் மாலை ஆர்.சி.பி வீரர்களை நேரில் அழைத்து சிறப்பிக்க அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டி... மேலும் பார்க்க

Manipur: மணிப்பூரில் மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்; இணைய சேவைகள் முடக்கம் - என்ன நடக்கிறது?

இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் சிகப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு மணிப்பூருடையது. மே 3, 2023-ம் ஆண்டு இரு சமூக மக்களுக்கிடையே கலவரம் தொடங்கி இன்றுடன் சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்து... மேலும் பார்க்க